search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
    X

    கைதான 2 பேர்

    கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

    • அவனியாபுரத்தில் கத்தியை காட்டி பணம் 2 பேர் பறித்தனர்.
    • கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    அவனியாபுரம்

    ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்தவர் சத்திய நாராயணன். இவர் மாநகராட்சி காலனி-அவனியாபுரம் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்‌. அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் சத்தியநாராயணனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்து 350-ஐ பறித்து தப்பினர்.

    இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் சத்தியநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட சிலைமான் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற கிரி, கல்மேடு பகுதியைச் சேர்ந்த அதீஸ்வரன் ஆகிேயாரை கைது செய்தனர்.

    வில்லாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் பிரபு (22). இவர் அவனியாபுரம் அம்பேத்கர் தெரு சந்திப்பில் சென்றபோது சக்கிமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆசாரி மணி (27), சிவகங்கை மாவட்டம் பெரிய சிலைமானை சேர்ந்த சண்முகம் மகன் தினகரன் என்ற தீனா (20) ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி பிரபுவிடம் இருந்து ரூ1000-த்தை வழிப்பறி செய்து தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற ஆசாரி மணி, தினகரன் என்ற தீனா இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×