search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைவரது இல்லத்தில் இன்பமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்கட்டும்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தீபாவளி வாழ்த்து
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    அனைவரது இல்லத்தில் இன்பமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்கட்டும்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தீபாவளி வாழ்த்து

    • உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.
    • ஆண்டு முழுவதும் குடும்பத்தினருக்காக உழைப்பவர்களுக்கு பண்டிகைகள் அவர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அதுபோல தீபாவளிப் பண்டிகையும் இந்தியாவில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியையும், தீமையின் மீது நன்மையையும், அறியாமையின் மீதான அறிவையும் குறிக்கிறது. தீபாவளி அன்று நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து அலங்காரம் செய்வது, புத்தாடைகள் அணிவது நம் மனதிற்கு ஒரு மகிழ்ச்சியையும், குடும்பத்தினருடனும், உறவினருடனும் நம் அன்பையும் பாசத்தையும் புதுப்பித்து கொள்ள நல்வாய்ப்பாக உள்ளது.

    ஆண்டு முழுவதும் குடும்பத்தினருக்காக உழைப்பவர்களுக்கு இது போன்ற பண்டிகைகள் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும் இந்நாளில் அக்கம், பக்கத்தினருடன் அன்பையும், மரியாதையை யும், வலுவான பிணைப்பு களையும் குறிக்கும் வகையில், பரிசுப்பரிமாற்றங்கள் மற்றும் இனிப்புகளையும், பலகாரங்களையும் பரிமாறிக் கொண்டு வருகிறோம்.

    நம் வாழ்வில் இருள் நீங்கி ஒளி உண்டாகுவதை குறிக்கும் விதமாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறோம். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காற்று மாசுபா டுகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பது என்பது நம் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கும் சூழ்நிலையில், சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணமாக பசுமை பட்டாசுகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

    தீபாவளி என்பது வெறும் பண்டிகை அல்ல. இது நம் கலாச்சாரத்தோடும், பாரம்பரியத்தோடும் பின்னி பிணைந்துள்ளது. இந்நன்னாளில் அனைவரது இல்லத்தில் இன்பமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்கி, உங்களது ஆசைகளும், கனவுகளும் நிறைவேற இந்த நாள் இனிய நாளாக அமைய என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×