search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 1,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    அமைச்சர் கீதாஜீவன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய காட்சி.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 1,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 2-வது இடமும் பெற்ற காயத்ரிக்கு இளைஞர் அணி சார்பில் நினைவு பரிசு வழங்கினார்.
    • தி.மு.க. ஆட்சி வந்தபிறகு எல்லா கோவில்களிலும் எல்லா நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடை பெறுகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சண்முக புரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தி யப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் தசரா விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    9-ம் நாள் நவராத்திரி சரஸ்வதி பூஜையை யொட்டி 50-ம் ஆண்டு சண்முகபுரம் இளைஞர் முன்னேற்ற அணியினர் சார்பில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி ஓருங்கிணைப்பாளரும் தி.மு.க. வட்டச்செயலாள ருமான பொன்ராஜ், தலைமை தாங்கினார்.

    அமைச்சர் கீதாஜீவன்

    அமைப்பாளர்கள் முத்து மாரியப்பன், சுரேஷ், முத்துக்கு மார். ராஜேஷ், செல்வசுபாஷ், சூரியகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் பேபி ஏஞ்சலின் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தின ராக அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இன்னிசை கச்சேரியை கண்டுகளித்து பின்னர் மாற்றுத்திறனாளி களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 2-வது இடமும் பெற்ற காயத்ரிக்கு இளைஞர் அணி சார்பில் நினைவு பரிசு வழங்கினார். மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கநாணயம் உள்பட 50 பரிசு பொருட்களை வழங்கினார்.

    1,000 கோவில்களில் கும்பாபிஷேகம்

    தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 2 ½ ஆண்டுகளில் அறநிலைத்துறை சார்பில் 1,000 கோவில்களில் கும்பா பிஷேகம் நடைபெற்றுள்ளது. அதே போல் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான அறநிலைய துறைக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. எல்லா மதத்ததையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் மதவெறியைதான் வெறுக்கிறோம்.

    தி.மு.க. ஆட்சி வந்தபிறகு எல்லா கோவில்களிலும் எல்லா நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடை பெறுகிறது. அதே போல் வியாபாரிகளுக்கு இரவு 10 மணி வரை கடைகள் இயங்கலாம் என்று இருந்ததை அவர்களது கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மணி வரை கடைகளை திறந்திருப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

    இப்படி தமிழகத்தில் எல்லா துறைகளிலும் நல்ல வளர்ச்சியடைந்து பொருளாதார நிலை உயர்ந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கு கிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    விழாவில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், வட்ட செயலாளர் சுரேஷ், கோவில் துணைசெயலாளர் பொன் ஆனந்த், தொழிலதிபர் சுந்தர்ராஜ், வியாபாரிகள் சங்க செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், திருப்பணி கமிட்டி முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ராஜசேகர், கலியுகவரதன், சந்தர், ஜெயக்குமார், ரவி, சங்கர், நாகேந்திரன், ராஜா, பாஸ்கர், குமரன், காமாட்சி, ஸ்டார் உள்பட பக்தர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×