search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    நாகர்கோவிலில் இன்று மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

      நாகர்கோவில்:

      தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அதை திரும்பப் பெறக் வலியுறுத்தியும் அனுமதி இன்றி டாஸ்மார்க் மதுபான பார் நடத்துவதை கண்டித்தும் குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

      அமைப்புச் செயலாளர் பச்சைமால். மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம், அனைத்துலக எம்ஜி.ஆர் மன்றம் கிருஷ்ண தாஸ், இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜ் ,வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பரமேஸ்வரன், நாகர்கோவில் மாநகராட்சி பகுதி செயலாளர்கள் ஜெய கோபால், முருகேஸ்வரன், ஜெவின், விசு ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

      அ.தி.மு.க ஆட்சியில் தான் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இலவச லேப்டாப் போன்ற எண்ணற்ற திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு உன்னதத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

      ஏழை எளிய மக்களை பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். விலைவாசி உயர்ந்துள்ளது.மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண 2024-ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நல்லாட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும்.

      இவ்வாறு அவர் பேசினார்.

      ஆர்ப்பாட்டத்தில் அவை தலைவர் சேவியர் மனோகரன், சிவகுற்றாலம்,மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், அணி செயலாளர்கள் ஜெயசீலன்,ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன் சுந்தரநாத்,ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார்,மாவட்ட கவுன்சிலர் நீல பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, குமரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வினோஜ்,தோவாளையூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மற்றும் நிர்வாகிகள் சகாயராஜ், சந்துரு, வடிவை மாதவன், ரெயிலடி மாதவன், கோட்டார் கிருஷ்ணன், வெங்கடேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர் உசேன், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், முன்னாள் குளச்சல் தொகுதி செயலாளரும் குளச்சல் நகராட்சி கவுன்சிலருமான ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரவீந்திரவர்சன், உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

      போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மண்எண்ணை விளக்குகளுடன் வந்திருந்தனர். அவர்கள் அரசை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

      Next Story
      ×