என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
திருவரம்பூர் பைற்றுவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் அணில் (வயது 26). இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருவட்டாரிலிருந்து திருவரம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.கொல்வேல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் அவரது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது.
சிறிது நேரத்தில் ரோட்டோரத்திலிருந்து மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் முன் பகுதி சேதமடைந்ததுடன் அணில் தூக்கி வீசப்பட்டார். தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளை கைப்பற்றி திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பிணமாக கிடந்த அணில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்