search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
    X

    அபீஸ்

    குளச்சல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

    • நண்பர் கீழே விழுந்து படுகாயம்
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திங்கள்நகர் அருகே தலக்குளத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அபீஸ் (வயது 18). இவரது நண்பர் பெத்தேல்புரம் ஜோயல் (19). இவர்கள் 2 பேரும் கறிக்கோழி கடை யில் வேலை பார்த்து வந்தனர்.

    நேற்று மதியம் 2 பேரும் செம்பொன் விளையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மேற்கு நெய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜோயல் ஓட்டினார். பின்னால் அபீஸ் உட்கார்ந்திருந்தார்.

    வர்த்தான்விளை அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிர்பாராமல் தாறு மாறாக ஓடியது. மேலும் அதேவேகத்தில் சாலையோரம் உள்ள ஓடையில் பாய்ந்தது.இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

    விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்தது. அப்பகுதியினர் விரைந்து வந்து அபீஸ் மற்றும் ஜோயலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியி லேயே அபீஸ் பரிதாபமாக இறந்தார்.

    ஜோயல் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×