search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேசன் அரிசி பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட டெம்போ

    களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேசன் அரிசி பறிமுதல்

    • களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன தணிக்கை.
    • கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி:

    தமிழக கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் படந்தாலுமூடு சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக தேங்காய் ஏற்றி மினி டெம்போ ஒன்று வந்துக்கொண்டிருந்தது. வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் சுமார்1½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கபட்டது.

    இதையடுத்து போலீசார் டெம்போ டிரைவரை கைது செய்தனர்.அவர் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.இதை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும் அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×