search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க.சார்பில் ஜனசங்க நிறுவனர் நினைவு நாள் நிகழ்ச்சி
    X

    ஜனசங்க நிறுவனர் நினைவு நாள் நிகழ்ச்சியி ல் பங்கேற்றவர்களை படத்தில்காணலாம் 

    பா.ஜ.க.சார்பில் ஜனசங்க நிறுவனர் நினைவு நாள் நிகழ்ச்சி

    • மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஆகிய பகுதிகளில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம், மங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தாய் சங்கமான ஜனசங்க நிறுவனர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஆகிய பகுதிகளில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த திருப்பூர் தெற்கு ஒன்றியம்,திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மோகன் குமார் , திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சி.பி.சுப்பிரமணியம், மண்டல் தலைவர் சரவணன், முன்னாள் மண்டல தலைவர் மகேந்திரன், தொழில் பிரிவு மாவட்ட துணை தலைவர் ஐ.ஈ.டி.சி.விநாயகமூர்த்தி, மண்டல் பொதுச்செயலாளர்கள் தேன்மொழி, சம்பத்குமார், ஐ.டி.பிரிவு மாவட்ட செயலாளர் செல்வகுமார், மண்டல செயலாளர் குட்டி கோவிந்தராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிசண்முகம், இளைஞர்அணி நிர்வாகி ராஜேஷ் மற்றும் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள்கலந்துகொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×