search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
    X

    தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

    • இதற்கு மதுரை மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
    • முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ராம பழனியப்பன் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    மதுரை மாவட்டத்தில் தேசிய திருக்கோயில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் எல்லிஸ் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்றது.

    இதற்கு மதுரை மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி, தேசிய துணை தலைவர் வழக்கறிஞர் பழனிகுமார், மராட்டிய சங்கம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அமைந்திருக்கும் கோயில்கள் அந்தப் பகுதி மக்கள் கருத்துக்கள் கேட்பு அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது .

    நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், இறை பணி தொண்டர்கள், தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் ராம பழனியப்பன் நன்றி கூறினார்.

    Next Story
    ×