search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியில்  சிக்கி மின் கம்பி அறுந்து விழுந்தது
    X

    கரும்பு லோடு ஏற்றிவந்த லாரி.

    கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியில் சிக்கி மின் கம்பி அறுந்து விழுந்தது

    • குமாரபாளையத்தில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியில் சிக்கி மின் கம்பி அறுந்து விழுந்தது.
    • மின் கம்பி அறுந்ததால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தேவூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, வெள்ளாளபாளையம், செட்டிபட்டி, அரசிராமணி உள்ளிட்ட பல கிராமங்களில் விளையும் கரும்புகளை விவசாயிகள் லாரிகள், டிராக்டர்கள் மூலமாக குமாரபாளையம் எடப்பாடி சாலை வழியாக பள்ளிபாளையம் அருகே உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    இதில் மின் கம்பிகள் அறுந்து விடுவது, மின் கம்பங்கள் சாய்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கரும்பு லோடு ஏற்றிய லாரி காவேரி நகர் பகுதியில் வரும் போது மின் கம்பிகள் கரும்பில் சிக்கி இழுத்து வந்ததில் பல மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    அந்த நேரத்தில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எந்த வித அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பு வழங்கும் பணியை செய்தனர். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மின்வாரிய அதிகாரிகளின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×