search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    தஞ்சையில், ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • 70 வயது அடைந்த அனைத்து ஓய்வுதிகளுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தஞ்சை பனங்க கட்டிடம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

    பேராட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்டத் துணைத் தலைவர் பால்ராஜ் வரவேற்றார். துணைத்த லைவர் பூபதி மாவட்ட இணைச்செ யலாளர்கள் வெங்கடேசன், பாலசுப்ர மணியன், பிச்சை முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் தணிக்கையாளர்கள் சமுத்திரக்கனி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் 70 வயது அடைந்த அனைத்து ஓய்வுதிகளுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுகளை திட்டத்தை வழங்க வேண்டும்,

    மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவுத்தொகை வழங்காமல் நிலுவையில் இருக்கும் அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து செலவுத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த பட்டது.

    நிகழ்ச்சியில் குருசாமி, ரங்கசாமி, தங்கராசு, ரவிச்சந்திரன் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு மற்றும் 150 க்கு மேற்பட்ட ஓய்வூதிய சங்கத்தினர் பங்கு பெற்றனர்.

    Next Story
    ×