என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு அரிவாள் வெட்டு- மைத்துனர் உள்பட 4 பேர் கைது
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
- இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் சங்கர் அரிவாளுடன் சென்று அவரது மனைவி மற்றும் மைத்துனருடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டி உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் சங்கர்(வயது 37). தற்போது பிரையண்ட் நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தகராறு
இதனால் வெறுப்படைந்த கவுசல்யா பி அன்ட் டி காலனியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் தனது நண்பர்களுடன் மாமியார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கவுசல்யாவின் தம்பி எட்வினை(24) அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
அரிவாள் வெட்டு
இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் சங்கர் அரிவாளுடன் சென்று அவரது மனைவி மற்றும் மைத்துனருடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டி உள்ளார். அப்போது வீட்டில் இருந்த எட்வின் மற்றும் அவரது உறவினர்கள் இஸ்ரவேல்(23), மதன்குமார்(18), ராபின்(19) ஆகியோர் சங்கரை எச்சரித்து அனுப்பி உள்ளனர். ஆனால் அவர் வீட்டுக்கு செல்ல மறுத்து, தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். உடனே அவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி சங்கரை வெட்டியுள்ளனர்.
இதில் தலை உள்ளிட்ட உடலில் பல பாகங்களில் வெட்டு காயம் அடைந்த சங்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு எட்வின், இஸ்ரவேல், மதன்குமார், ராபின் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்