என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாளையில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனிதசங்கிலி பேரணி
Byமாலை மலர்22 Feb 2023 9:37 AM GMT
- ராபர்ட் பேடன் பவுல் பிறந்தநாள் உலக சிந்தனை நாளாக கடை பிடிக்கப்படுகிறது.
- மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி பேரணியை தொடங்கி வைத்தார்.
நெல்லை:
சாரண, சாரணியர் இயகத்தை தோற்றுவித்த ராபர்ட் பேடன் பவுல் பிறந்தநாள் உலக சிந்தனை நாளாக கடை பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி நெல்லை கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கலி பேரணி இன்று நடைபெற்றது.
பாளையில் தொடங்கிய பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி தொடங்கி வைத்தார். நேர்முக உதவியாளர் டைட்டஸ் தலைமை தாங்கினார். சாரண, சாரணியர் இயக்க இணைச்செயலாளர் பார்த்த சாரதி, பொருளாளர் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி ஆணையர் முகம்மது ஜாபர், வெங்கடேஷ், இளமதி மற்றும் பலர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X