search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது; 2½ கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    தூத்துக்குடியில் கஞ்சா விற்றவர் கைது; 2½ கிலோ கஞ்சா பறிமுதல்

    • சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்து சோதனை நடத்தினர்.
    • அதில் அவரிடம் 2 ½ கிலோ கஞ்சா இருப்பதும், அதனை அவர் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுப வர்களை உடனடி யாக கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர விட்டுள்ளார்.

    அதன்படி இன்று தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையில் நகர தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜ் மற்றும் போலீசார் தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்து சோதனை நடத்தினர்.

    அதில் அவரிடம் 2 ½ கிலோ கஞ்சா இருப்பதும், அதனை அவர் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தெர்மல், முத்துநகரை சேர்ந்த பெரியநாயகம்

    ( வயது 48) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×