search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் சங்கு குளித்த மீனவர் பலி
    X

    தூத்துக்குடியில் சங்கு குளித்த மீனவர் பலி

    • கெபிஸ்டன், காஜாமைதீன் உட்பட 10 சங்குகுளி தொழிலாளர்கள் தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு அருகில் கடலுக்குள் மூழ்கி சங்கு எடுத்துக் கொண்டிருந்தனர்.
    • அப்போது கடலுக்குள் மூழ்கி சங்கு எடுத்துக் கொண்டிருந்த கெபிஸ்டன் வல்லத்தில் ஏறி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவநாயர் காலனியை சேர்ந்த கெபிஸ்டன் (வயது20), லடிஸ் ( 37), சேசுராஜா (37) , காஜாமைதீன் (47) மற்றும் முத்துக்குமார் (29) உட்பட 10 சங்கு குளி தொழிலாளர்கள் திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 7 கடல் மைல் தொலைவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு அருகில் கடலுக்குள் மூழ்கி சங்கு எடுத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது கடலுக்குள் மூழ்கி சங்கு எடுத்துக் கொண்டிருந்த கெபிஸ்டன் வல்லத்தில் ஏறி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

    உடனடியாக அவரை கரைக்கு அழைத்து வந்து தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கெபிஸ்டன் இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக தருவைக்குளம் கடல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுப்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×