search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்
    X

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்

    • நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்தார்.
    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பொத்தனூர் அரசு பள்ளி மாணவன் சாதனை செய்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    பிளஸ்-2 பொது தேர்வில் பொத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் வைரப்பெருமாள் 600க்கு 580 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்தார். அதேபோல்10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி சுபஸ்ரீ பள்ளி யில் முதலிடம் பிடித்தார்.

    மாணவன் வைரப்பெரு–மாள் மற்றும் மாணவி சுபஸ்ரீக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் ஆர். கருணாநிதி சால்வை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் தலைமை ஆசிரியர் குமார், விவசாயிகள் சங்க தலைவர் என் . வி .எஸ். செந்தில்நாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுப்பிரமணியம், டி.பி. ஏ. அன்பழகன், கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அலுவலக பணியாளர்களும் வாழ்த்தினார்கள்.

    Next Story
    ×