search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி -  ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கிய காட்சி

    சங்கரன்கோவில் அருகே சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி - ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

    • சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமையில், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்றனர்.
    • பலியான தங்கவேல் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் ஆவுடையாள்புரம் கிராமத்தில் சூறாவளிக் காற்றால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியான தங்கவேல் குடும்பத்தினர் மற்றும் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட பெருமாள், வள்ளிமுத்து ஆகியோர் வீட்டிற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமையில், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்றனர். பலியான தங்கவேல் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10ஆயிரம் நிதியும், சூறாவளி காற்றால் வீடு இழந்த பெருமாள் மற்றும் வள்ளிமுத்து ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மருதன்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் தங்கதுரை, ஆவுடையாள்புரம் கிளை செயலாளர் முத்தரசு, வன்னியம்பட்டி சுவாமிதாஸ், மாதவன், ரமேஷ், சுகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×