என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் அருகே சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி - ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
- சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமையில், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்றனர்.
- பலியான தங்கவேல் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் ஆவுடையாள்புரம் கிராமத்தில் சூறாவளிக் காற்றால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியான தங்கவேல் குடும்பத்தினர் மற்றும் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட பெருமாள், வள்ளிமுத்து ஆகியோர் வீட்டிற்கு மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை தலைமையில், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரில் சென்றனர். பலியான தங்கவேல் குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி ரூ.10ஆயிரம் நிதியும், சூறாவளி காற்றால் வீடு இழந்த பெருமாள் மற்றும் வள்ளிமுத்து ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மருதன்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் தங்கதுரை, ஆவுடையாள்புரம் கிளை செயலாளர் முத்தரசு, வன்னியம்பட்டி சுவாமிதாஸ், மாதவன், ரமேஷ், சுகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்