search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் பட்டறிவு சுற்றுலாவிற்கு சென்ற பாபநாசம் விவசாயிகள்
    X

    பட்டறிவு சுற்றுலாவிற்காக அழைத்து செல்லப்பட்ட பாபநாசம் விவசாயிகள்.

    வேளாண் பட்டறிவு சுற்றுலாவிற்கு சென்ற பாபநாசம் விவசாயிகள்

    • ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டுருக்கு 5 நாட்களுக்கு பட்டறிவு சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர்.
    • விளைபொருளுக்கேற்ற தொகை பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டாரம் வேளாண்மைத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் 20 விவசாயிகள் மாநிலங்களுக்கிடையேயான பட்டறிவு சுற்றுலாவிற்கு பேருந்து மூலம் அழைத்துசெல்லப்பட்டனர்.

    ஒழுங்குமுறை விற்ப னைக்கூட நடைமுறைகள் மற்றும் மின்னனு தேசிய வேளாண் சந்தை தொடர்பாக பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகள் 5 நாட்களுக்கு ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மிளகாய் சந்தையான ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டுருக்கு பட்டறிவு சுற்றுலாவாக அழைத்துசெல்லப்பட்டனர்.

    அங்கு ஆந்திராவில் பயிரப்படும் மிளகாய் இரகங்கள், பயிரிடப்படும் பருவங்கள் பயிர் தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை படுத்தல் ஆகிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் நேரில் கண்டு விவரங்கள் கொண்டு அறியபெற்றனர்.

    விவசாயிகள் மிளகாயை எவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    சந்தைப்படுத்தும் முறைகள்தரம் நிர்ணயம், விளைபொருளுக்கு ஏற்ற விலை நிரணயம் செய்தல் மின்னனு தரம் நிர்ணயம், தர சான்று பெறுதல் தேசிய வேளாண் சந்தை இணைய தளத்தில் பதிவு செய்தல், வியாபாரிகளை எவ்வாறு தொடர்பு கொள்ளுதல், விளைபொருளுக்கேற்ற தொகை பெறும் வழிமுறைகள் ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவினம் தங்குமிடம் மற்றும் இந்த சுற்றுலாவிற்கு உணவு வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.

    விவசாயிகளை பாபநாசம் வட்டாரம் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிவரஞ்சனி மற்றும் பாபநாசம் தொகுதி உதவி வேளாண்மை அலுவலர் திரிபுரசுந்தரி விவசாயிகளை அழைத்து சென்றிருந்தனர்.

    Next Story
    ×