search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்தி முனையில் டிரைவரிடம் பணம் பறிப்பு
    X

    கத்தி முனையில் டிரைவரிடம் பணம் பறிப்பு

    • கை-கால் வலிப்பு வந்தது போல் நடித்தார்
    • 3 பேர் திடீரென சுற்றி வளையத்தனர்

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார்.அவர் அன்னூர்- மேட்டுப்பாளையம் ரோடு ஜெ.ஜெ.நகர் அருகே சென்றார். அங்கு வாலிபர் ஒருவர் சாலையில் கை-கால் வலிப்பு வந்தது போல் துடித்து கொண்டு இருந்தார். அவர் உடனே மினி வேனை நிறுத்தி தண்ணீர் பாட்டிலை எடுத்து கொண்டு அந்த வாலிபரின் அருகே சென்றார்.அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 பேர் திடீரென மாரிமுத்தை சுற்றி வளையத்தனர். அவர்களுடன் கை-கால் வலிப்பு வந்தது போல் நடித்த வாலிபரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கட்டி மிரட்டினர்.பின்னர் அவரிடம் இருந்த ரூ.6800 மற்றும் வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்து தப்பி சென்றனர்.

    Next Story
    ×