search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் கூலி தொழிலாளியிடம் பணம் பறிப்பு
    X

    கோவையில் கூலி தொழிலாளியிடம் பணம் பறிப்பு

    • இளங்கோ கூலி வேலை செய்து வருகிறார்.
    • பணம் பறித்த ஸ்ரீஹரியை போலீசார் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை நீலிகோண ம்பாளையம் அருகே செட்டியார் தோட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது50).

    இவர் அந்த பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஸ்ரீஹரி (20). சம்பவத்தன்று இளங்கோ வீட்டில் இருந்தார். அப்போது ஸ்ரீஹரி அவரது வீட்டிற்கு சென்று மது அருந்துவதற்கு பணம் தரும்படி கேட்டார். இதனையடுத்து அவர் என்னிடம் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்கு மட்டுமே பணம் உள்ளது என தெரிவித்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஹரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த ரூ.250 பணத்தை பறித்தார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இது தொடர்பாக அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடி சென்ற ஸ்ரீஹரியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×