என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தில் நடைபெற்றது.
- விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம்:
மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம், மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான கென்னடி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து துணை தலைவர் பிர்தவுஸ் முன்னிலை வகித்தார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் பிளாரன்ஸ் , குழந்தைகளின் உரிமைகள், பாதிக்கப்படும் சூழ்நிலைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல், தண்டனைகள் என்ற தலைப்புகளில் கருத்துரை வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்