search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தில் நடைபெற்றது.
    • விழிப்புணர்வு கருத்தரங்கத்தினை லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவனம், மதர் சமூக சேவை நிறுவனம், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மற்றும் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை கிராமத்தில் நடைபெற்றது.

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் பனை தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான கென்னடி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து துணை தலைவர் பிர்தவுஸ் முன்னிலை வகித்தார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் பிளாரன்ஸ் , குழந்தைகளின் உரிமைகள், பாதிக்கப்படும் சூழ்நிலைகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல், தண்டனைகள் என்ற தலைப்புகளில் கருத்துரை வழங்கினார்.

    Next Story
    ×