search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் முனைவோர்"

    • கலசலிங்கம் பல்கலையில் தொழில் முனைவோர் அரங்கம் திறப்பு விழா நடந்தது.
    • இயக்குநா் டெனி, துறைத்தலைவா் சந்திரசேகா் ஆகியோர் செய்திருந்தனா்.

    ஸ்ரீவில்லிபுத்தூா்

    ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலையில் வணிக நிர்வாகத்துறை சார்பில் தொழில் முனைவோர் அரங்கம் திறப்பு விழா நடந்தது. பல்கலைக்கழக துணைத்தலைவா் சசிஆனந்த் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலா் தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குநா் உமாசங்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரங்கை திறந்து வைத்தார்.

    அங்கு மாணவர்கள் அமைத்திருந்த கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். துணைவேந்தா் நாராயணன், பதிவாளா் வாசு தேவன், டி.ஐ.ஆா். சரசு, முதல்வர் கணேசன் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐ.இ.டி.சி. இயக்குநா் டெனி, துறைத்தலைவா் சந்திரசேகா் ஆகியோர் செய்திருந்தனா்.

    • விருதுநகர் அருகே தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகாசி, தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகமும் இணைந்து அத்திகுளம் கிராமப்புற மக்களுக்கு தொழில் முனைவோருக்கான ஒருநாள் விழிப்புணர்வு முகாமை நடத்தியது.

    முகாமை அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி மன்றத் தலைவர் செண்பகமூர்த்தி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர்சுதா பெரியத்தாய் வரவேற்றார். யு.பி.ஏ. ஒருங்கிணைப்பாளர் உமாசங்கரி தொடக்க உரையாற்றினார். விருதுநகரின் டி.ஐ.சி.யின் பொது மேலாளர் ராமசுப்ரமணியன், கிராமப்புற தொடக்கத் தொழில்முனைவோருக்கான டி.ஐ.சி. திட்டத்தை பற்றி பேசினார். அதனைத் தொடர்ந்து வழக்குறைஞர் ராஜகோபால், விருதுநகர் மார்க்கெட்டிங்கில் சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மார்க்கெட்டிங் மேம்படுத்தும் வழி பற்றி பேசினார்.

    விரிவுரையாளர் பீட்டர் நிர்மல்ராஜ், பி.ராஜசுரேஷ்வரன் தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினர். மதுரை மாவட்ட உதவி இயக்குநர் செந்தில்குமார், காந்திகிராம கிராமப்புற நிறுவனம் ஒருங் கிணைப்பாளர் ரவிச்சந்திரன் பேசினர். இதில் மாணவர்கள் மற்றும் அத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பேராசிரி யைகள் அன்னபாக்கியம், பத்மப்ரியா, கலைவாணி மற்றும் மெர்லின்ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் தொழில்துறை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் உதவி முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி தலைமை தாங்கினார். தொழில் முதலீட்டு கழகத்தின் சென்னை மண்டல மேலாளர் பழனிவேல், தொழில் முதலீட்டு கழக மறைமலைநகர் கிளை மேலாளர் சுந்தரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார் சிப்காட் திட்ட அலுவலர் நளினி குறு சிறு தொழில் முதலீட்டு அசோசியேஷன் செயலாளர் தனசேகரன், கருங்குழி அரிசி ஆலை செயலாளர் குமார் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    இதில் தொழில் முனைவோர்களுக்கு கடன் தொகையாக ரூ.30 கோடி வழங்கப்பட்டது.

    • டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
    • உதவி பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் டிஜிட்டல் உலகில் தொழில் முனைவோர்களுக் கான புதுமை திட்டங்கள் என்னும் தலைப்பில் சர்வ தேச கருத்தரங்கு நடைபெற் றது. துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் கருத்தரங்கை தொடங் கிவைத்து பேசினார்.

    முதல் அமர்வில் நைஜீ ரியா, ஆப்பிரிக்கா பல் கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப் பேராசிரியர் ராஜன் துரை ராஜ் கலந்து கொண்டு தொழில் முனைவோர் வெளிநாட்டு முதலீடு செய் யும் முறைகள் குறித்து பேசி னார்.

    இரண்டாம் அமர்வில் உதவிப்பேராசிரியர் அர பாத் அலி சிறப்பு விருந்தின ரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக உஸ் பெகிஸ்தான், தொழில் நுட் பத்துறை இணைப்பேரா சிரியர் சுபைர் அலி கலந்து கொண்டு சிறு தொழில் வளர்ச்சியில் கணினி வழி கற்றலின் தாக்கம் குறித்து பேசினார். உதவி பேராசிரி யர் அரபாத் ஹசன் நன்றி கூறினார்.

    நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை பேராசிரியர் வேதிராஜன் கலந்து கொண்டு பேசினார். உதவிப்பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

     திருப்பூா்:

    திருப்பூா் மாவட்டத்தில் சுற்றுலா விருதுக்குத் தகுதியான தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் அறிவிப்பின்படி ஒவ்வோா் ஆண்டும் சுற்றுலாத் தொழில்முனைவோருக்கு சுற்றுலா விருது வழங்குவதற்கான வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை உலக சுற்றுலா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

    இந்த விருதுகளானது சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://tntourismawards.com/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் 15 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மதுரை

    உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. சுற்றுலா ஆபரேட்டர், உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர், பயண கூட்டாளர், விமான கூட்டாளர், தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர், முக்கிய சுற்றுலா ஆபரேட்டர், சாகச சுற்றுலா மற்றும் முகாம் தள ஆபரேட்டர், கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர், சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர பொருள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் போன்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த விருது பெற மதுரை மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம் 1, மேல வெளி வீதி, மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    • மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழில் முனை வோர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்ப டுகின்றன.

    புதிய கட்டிட திறப்பு விழா

    இந்நிலையில் கல்லூரியில் நடந்த எம்.எஸ்.எம்.இ. மைய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு அறிவுறுத்தலின் படி கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டார். விழாவில் சென்னை தலைமையக எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குநர் சுரேஷ்பாபு, உதவி இயக்குநர்கள் (நெல்லை) சிமியோன், ஜெரினாபபி மற்றும் அதிகாரி கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர்.

    நிகழ்ச்சியில் சுரேஷ்பாபு பேசுகையில், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. செயல்பாடுகள் நன்றாக உள்ளது. மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும் என்றார்.

    கல்லூரி பொதுமேலாளர் ஜெயக்குமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் ஆதரவுடன் இன்குபேஷன் மையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மாணவர்கள் தங்களது திறன்மிக்க யோசனைகளை வழங்க முன்வர வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்பட்டன.

    மேலும் மத்திய அரசு நடத்தும் ஹேக்கத்தான் போட்டிகள், தமிழக அரசின் ஸ்டார்ட்-அப் போட்டிகளில் எப்.எக்ஸ். கல்லூரி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர் ஜான்கென்னடி, தொழில் முனைவோர்துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மைய தலைவர் லக்ஷ்மி நாராயணன் மற்றும் மதுரை எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர்கள் உமா சந்திரிகா, ஜெயசெல்வம், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மிஷன் திட்ட தலைவர் ராகுல், பயிற்றுவிப்பாளர்கள் ராஜ், முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பிரியா நன்றி கூறினார். 

    • ஆதிதிராவிடர்-பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான சிறப்புத் திட்டத்தில் பயன்பெறலாம்.
    • பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோரின் பங்கு குறைவாக இருப்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோர்களுக்கென பிரத்தியேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழி யும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

    ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன், இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் பட்டுபுழு வளர்ப்பு போன்ற தொழில்கள் தொடங்கலாம். ஆனால் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.

    மேலும் அறுவடை எந்திரம் மற்றும் விவசாய உபகரணங்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் கல்யாண மண்டபம், தங்கும் விடுதி, சேமிப்பு கிடங்கு, எரி பொருள் விற்பனை நிலையம் போன்றவை அமைக்கலாம்.

    உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தயாரித் தல், மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், நகரும் அலகுகள் கொண்ட சுற்றுலா ஊர்திகள், கலவை எந்திரங்கள், மருத்துவ அவசர ஊர்தி, குளிர்சாதனம் பொருத்திய ஊர்தி உள்ளிட்ட எந்த திட்டமா கவும் இருக்கலாம். இயங்கி கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரி வாக்கம், பல்துறையாக்கம், நவீன மாக்கல், தொழில் நுட்ப மேம்பாட்டு முன்மொழிவு களுக்கும் உதவி வழங்கப்படும்.

    மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 விழுக்காடு ஆகும். மானிய உச்ச வரம்பு ரூ.1.50 கோடி. இத்துடன் கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6 விழுக்காடு வட்டி, மானிய மும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த தனி நபர், பங்குதாரர் நிறுவனம், ஒரு நபர் கம்பெனி, தனியார் வரைய றுக்கப்பட்ட நிறுவனங்களும் (பிரைவேட் லிமிடெட்) இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

    இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற 18 வயது முடிந்து அதிகபட்சம் வயது 55 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65 விழுக்காடு வங்கி கடனாக பெறுவதற்கு 35 விழுக்காடு அரசின் பங்காக முன்முனை மானியமாக வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • வயது வரம்பு 18 வயது பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்.
    • மொத்த திட்ட தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாகவும் 35 சதவீதம் முன்முனை மானியமாகவும் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்ததொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல்அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களுக்கு உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த (நேரடி வேளாண்மைதவிர்த்த) தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிகடன் வழங்கப்படும்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு கல்வித்தகுதிதேவையில்லை. வயது வரம்பு 18 வயது பூர்த்தியாகியிருத்தல் வேண்டும். 55 வயதுக்குமிகாமல் இருத்தல் வேண்டும். வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாகவும் 35 சதவீதம் (அதிகபட்சம் ரூ.150 லட்சம்வரை) முன்முனை மானியமாகவும் வழங்கப்படும். எனவே பயனாளர்கள் சொந்தமூலதனம் செலுத்த தேவையில்லை. 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோரால் நடத்தப்படும்தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

    சொந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கும், விரிவாக்கத்திற்கும்இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் .35 சதவீதம் (அதிகபட்சம் ரூ.150 லட்சம் வரை)பின்முனை மானியமாகவும் வழங்கப்படும்.

    தொழில் முனைவோர் மேம்பாட்டுபயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பானசிறப்புபயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாடுமற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெற திட்டஅறிக்கை மற்றும் ஆவணங்களுடன்www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோ சனைகள்,வழிகாட்டுதல்கள், திட்டஅறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள்மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன்பெறுவது தொடர்பாக நிதிநிறுவனங்களுடன் இணைப்பு பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும்.திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினதொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ்விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கேட்டு கொண்டுள்ளார். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 0421-247507, 9500713022 என்ற எண்களின் மூலம்தொடர்புகொள்ளலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
    • தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சிவருத்ரய்யா (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோர் தொடங்கவிருக்கும், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.

    இதற்கு தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 044 27238837, 27238551 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது 7904559090, 95669 90779 செல்போன் எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆ.தெக்கூர் எஸ்.எஸ்.ஏ. கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது.
    • எஸ்.எஸ்.ஏ. கல்வி குழும நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூர் எஸ்.எஸ். ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் சந்திரசேகர், தாளாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். முதல்வர் மணிக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மாவட்ட தொழில் மைய உதவி மேலாளர் தேவராஜ், உதவி இயக்குனர் சிவஅய்யனன், கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சிறு தொழில் தொடங்குவது குறித்தும், அதனை சிறப்பான முறையில் நடத்தி வெற்றி காண்பது குறித்தும், அதில் பின்பற்றக்கூடாத நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வு குறித்தும் பேசினர். எஸ்.எஸ்.ஏ. கல்வி குழும நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தொழில் முனைவோர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.

    மதுரை

    அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு, மாநில தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சுந்தர், பொதுச்செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் சஞ்சீவ், பொருளாளர் பாஸ்கர், அவைத்தலைவர் நாகராஜன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும். புதிய மருந்து வரைவு சட்டப்படி மருந்துகள் மீதான தரக்குறைவுக்கு, சந்தைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    ×