search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "entrepreneur"

    • அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
    • தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சிவருத்ரய்யா (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில் முனைவோர்களுக்கென சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோர் தொடங்கவிருக்கும், உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த நேரடி வேளாண்மை தவிர்த்த தொழில் திட்டங்களுக்கும் வங்கி கடனுதவியோடு மானியம் வழங்கப்படும்.

    இதற்கு தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேலும் விவரங்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், காஞ்சிபுரம், என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 044 27238837, 27238551 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது 7904559090, 95669 90779 செல்போன் எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின்மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.
    • தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்ப தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பலதிட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காஅமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின்மானியமாக வழங்கப்படுகிறது. தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்ப தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின்மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.மேலும் அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது முதல்அமைச்சரின் கனவுத் திட்டம் ஆகும்.

    எனவே சிறிய அளவிலானஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், 30/3 நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம்தாந்தோணிமலை கரூர் 639005. கைபேசி எண்: 9444656445ரூபவ் 9092590486.

    • மதுரையில் பெண் தொழில் முனைவோர் தொழிலணங்கு நிகழ்ச்சி நடந்தது.
    • அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் "தொழிலணங்கு" நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் தத்துவம், கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பெண்களை சுயதொழில் முனைவோராக கொண்டு வர வேண்டும் என்பது, தமிழக முதலமைச்சரின் கனவு திட்டங்களில் ஒன்று. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் 18-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த மூன்றே மாதங்களில் அது நடைமுறைக்கு வந்து உள்ளது பெருமகிழ்ச்சி தருகிறது.

    மகளிர் சுய உதவிக்கு ழுவினர் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அவர்களின் படைப்புத் திறனுக்கு தொழில் நிறுவ னங்கள் ஊக்க சக்தியாக செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகர மேயர் இந்திராணி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சி உறையூரில் கடையில் இருந்த தொழிலதிபரிடம் மர்ம நபர் ஒருவர் அவரின் சட்ட பையில் இருந்த ரூ. 23 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
    திருச்சி:

    திருச்சி உறையூர் விவேகானந்தர்நகர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் அசோக்குமார் (45), உறையூர் பாண்டமங்கலத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையில் இருந்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் திடீரென அவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரின் சட்டை பையில் இருந்த ரூ.23 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினார்.  

    இது குறித்து அவர் திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட  அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×