search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் முனைவோர்களுக்கான சிறப்புத் திட்டம்
    X

    தொழில் முனைவோர்களுக்கான சிறப்புத் திட்டம்

    • ஆதிதிராவிடர்-பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான சிறப்புத் திட்டத்தில் பயன்பெறலாம்.
    • பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டங்களின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோரின் பங்கு குறைவாக இருப்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோர்களுக்கென பிரத்தியேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழி யும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.

    ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன், இறால் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் பட்டுபுழு வளர்ப்பு போன்ற தொழில்கள் தொடங்கலாம். ஆனால் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் ஆகும்.

    மேலும் அறுவடை எந்திரம் மற்றும் விவசாய உபகரணங்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் கல்யாண மண்டபம், தங்கும் விடுதி, சேமிப்பு கிடங்கு, எரி பொருள் விற்பனை நிலையம் போன்றவை அமைக்கலாம்.

    உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தயாரித் தல், மளிகை கடை, வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், நகரும் அலகுகள் கொண்ட சுற்றுலா ஊர்திகள், கலவை எந்திரங்கள், மருத்துவ அவசர ஊர்தி, குளிர்சாதனம் பொருத்திய ஊர்தி உள்ளிட்ட எந்த திட்டமா கவும் இருக்கலாம். இயங்கி கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரி வாக்கம், பல்துறையாக்கம், நவீன மாக்கல், தொழில் நுட்ப மேம்பாட்டு முன்மொழிவு களுக்கும் உதவி வழங்கப்படும்.

    மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 விழுக்காடு ஆகும். மானிய உச்ச வரம்பு ரூ.1.50 கோடி. இத்துடன் கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6 விழுக்காடு வட்டி, மானிய மும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த தனி நபர், பங்குதாரர் நிறுவனம், ஒரு நபர் கம்பெனி, தனியார் வரைய றுக்கப்பட்ட நிறுவனங்களும் (பிரைவேட் லிமிடெட்) இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

    இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற 18 வயது முடிந்து அதிகபட்சம் வயது 55 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65 விழுக்காடு வங்கி கடனாக பெறுவதற்கு 35 விழுக்காடு அரசின் பங்காக முன்முனை மானியமாக வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

    தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×