search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மைய திறப்பு விழா
    X

    திறப்பு விழாவில் பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.

    நெல்லை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மைய திறப்பு விழா

    • மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழில் முனை வோர்களுக்கு ஆலோசனைகள் அளிக்கப்ப டுகின்றன.

    புதிய கட்டிட திறப்பு விழா

    இந்நிலையில் கல்லூரியில் நடந்த எம்.எஸ்.எம்.இ. மைய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு அறிவுறுத்தலின் படி கல்லூரி முதல்வர் வேல்முருகன் கலந்து கொண்டார். விழாவில் சென்னை தலைமையக எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குநர் சுரேஷ்பாபு, உதவி இயக்குநர்கள் (நெல்லை) சிமியோன், ஜெரினாபபி மற்றும் அதிகாரி கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர்.

    நிகழ்ச்சியில் சுரேஷ்பாபு பேசுகையில், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் எம்.எஸ்.எம்.இ. செயல்பாடுகள் நன்றாக உள்ளது. மாணவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் உக்தி யோசனைகளை வழங்கவேண்டும் என்றார்.

    கல்லூரி பொதுமேலாளர் ஜெயக்குமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் ஆதரவுடன் இன்குபேஷன் மையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. மாணவர்கள் தங்களது திறன்மிக்க யோசனைகளை வழங்க முன்வர வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்பட்டன.

    மேலும் மத்திய அரசு நடத்தும் ஹேக்கத்தான் போட்டிகள், தமிழக அரசின் ஸ்டார்ட்-அப் போட்டிகளில் எப்.எக்ஸ். கல்லூரி சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில் பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர் ஜான்கென்னடி, தொழில் முனைவோர்துறை இயக்குநர் லூர்தஸ் பூபாலராயன், எம்.எஸ்.எம்.இ. இன்குபேஷன் மைய தலைவர் லக்ஷ்மி நாராயணன் மற்றும் மதுரை எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர்கள் உமா சந்திரிகா, ஜெயசெல்வம், தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மிஷன் திட்ட தலைவர் ராகுல், பயிற்றுவிப்பாளர்கள் ராஜ், முத்துக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பிரியா நன்றி கூறினார்.

    Next Story
    ×