search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலா விருதுக்கு தகுதியான தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்பு படம்.

    சுற்றுலா விருதுக்கு தகுதியான தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்

    திருப்பூா்:

    திருப்பூா் மாவட்டத்தில் சுற்றுலா விருதுக்குத் தகுதியான தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் அறிவிப்பின்படி ஒவ்வோா் ஆண்டும் சுற்றுலாத் தொழில்முனைவோருக்கு சுற்றுலா விருது வழங்குவதற்கான வழிகாட்டுதல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை உலக சுற்றுலா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் சுற்றுலாத்தொழில் முனைவோருக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

    இந்த விருதுகளானது சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://tntourismawards.com/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் 15 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×