search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு
    X

    அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு

    • அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தொழில் முனைவோர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.

    மதுரை

    அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு, மாநில தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சுந்தர், பொதுச்செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் சஞ்சீவ், பொருளாளர் பாஸ்கர், அவைத்தலைவர் நாகராஜன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும். புதிய மருந்து வரைவு சட்டப்படி மருந்துகள் மீதான தரக்குறைவுக்கு, சந்தைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    Next Story
    ×