search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் முட்டை விலை 3 நாட்களில் 60 காசுகள் உயர்வு
    X

    நாமக்கல்லில் முட்டை விலை 3 நாட்களில் 60 காசுகள் உயர்வு

    • முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்ந்தது.
    • முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசுகளாக உயர்ந்தது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. அதன் அடிப்படையில் பண்ணையாளர்கள் முட்டையை விற்பனை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி க டந்த 30-ந் தேதி 420 காசுகளாக முட்டை விலை மே 1-ந் தேதி 20 காசு உயர்ந்தது. பின்னர் 2-ந் தேதி 20 காசுகள் உயர்ந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்ந்தது. இதனால் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 480 காசுகளாக உயர்ந்தது.

    இதில் முட்டை விலை கடந்த 3 நாட்களில் மட்டும் 60 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. கடும் வெயிலால் முட்டை உற்பத்தி குறைந்ததால் இந்த விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 550 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 124 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று மேலும் 3 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ ௧௨௭ ரூபாயாகவும், முட்டை கோழி விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ 90 ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×