search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    ஆலங்குளத்தில் தே.மு.தி.க. ஆலோசனை கூட்டம்

    • தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் வருகிற 28-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வரும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவை சிறப்பாக வரவேற்று, கண்டன ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆலங்குளம்:

    தென்காசி தெற்கு மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலங்குளத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அவைதலைவர் சங்கரலிங்கம், பொருளாளர் சந்துரு சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் திருமலை செல்வம் வரவேற்றார்.

    கூட்டத்தில் வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இப்பகுதியில் நடைபெறும் கனிமவள கொள்ளையை கன்டித்தும் வருகிற 28-ந்தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வரும் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவை சிறப்பாக வரவேற்று, கண்டன ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் காமராஜ் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், பொதுக்குழு உறுப்பினர், விஜயகாந்த் மன்ற மாவட்ட செயலாளர் சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த் அருணா, சமுத்திரபாண்டியன், ரவிச்சந்திரன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×