என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரி நீதிமன்றத்தில் கலந்தாய்வு கூட்டம்
- சிவகிரியில் 13-ந் தேதி லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
- கூட்டத்துக்கு சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கினார்.
சிவகிரி:
சிவகிரி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வருகிற 13-ந் தேதி லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் மற்றும் போலீஸ் நிலைய வழக்குகள், வருவாய்த்துறை வழக்குகள் போன்றவை தொடர்பான வழக்குகள் சம்பந்தமாக சமரச தீர்வுகாண கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கினார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், கடையநல்லூர் மண்டல துணை தாசில்தார் கணேசன், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், வாசுதேவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன், நீதிமன்ற தலைமை எழுத்தர் கலாமணி, நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்