search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்.

    பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

    • 6 கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 5,400 அபராதம் விதிக்கப்பட்டது.
    • சோதனை செய்ததில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் பாபநாசம் கடைவீதி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வணிக நிறுவனங்களில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது 6 கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5400 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாபநாசத்தில் இருசக்கர வாகனத்தில் 4 மூட்டைகளுடன் அதிவேகமாக வந்தவரை பேரூராட்சி அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்ததில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×