என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை கல்லூரி மாணவரிடம் பணம், செல்போன் பறிப்பு
- ஓரின சேர்க்கையாளர்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளும் ‘மொபைல் செயலி’
- வங்கி கணக்கிற்கு ரூ. 36,400 பணத்தை மிரட்டி அனுப்ப வைத்தனர்.
கோவை
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 22 வயது வாலிபர்.
இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஓரின சேர்க்கையாளர்கள் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்தி கொள்ளும் 'மொபைல் செயலி' மூலம் வாலிபர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பேசி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், அந்த வாலிபர் கல்லூரி மாணவரிடம், நாம் இருவரும் நேரில் சந்திக்கலாம், ஜாலியாக இருக்கலாம் என குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவத்தன்று இரவு அந்த நபர் சொன்ன இடமான சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் உள்ள காலி மைதானத்திற்கு கல்லூரி மாணவர் சென்றார்.
அப்போது அங்கு 5 பேர் இருந்துள்ளனர். அவர்கள் திடீரென கல்லூரி மாணவரை மிரட்டி செல்போனை பறித்தனர். தொடர்ந்து 'கூகுள் பே' மூலம் அவர்களது வங்கி கணக்கிற்கு ரூ. 36,400 பணத்தை மிரட்டி அனுப்ப வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர் இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் செல்போன், பணம் பறித்த 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர். மேலும் அந்த கும்பல் இதேபோல் வேறு யாரிடமாவது பணம் பறித்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்