என் மலர்tooltip icon

    சென்னை

    • தேசிங்கு ராஜா 2 படம் வரும் 11ம் தேதி வெளியாகி உள்ளது.
    • தேசிங்குராஜா -2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் டீசர் வெளியானது.

    துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்கு ராஜா'.

    இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார்.

    தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

    மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குநர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

    தேசிங்குராஜா -2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

    வரும் 11ம் தேதி வெளியாக இருக்கும் தேசிங்குராஜா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    • உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.
    • மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயலும் பொம்மை முதலமைச்சருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களில் நியமனம் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது.

    அத்தீர்ப்புகளை மீறி ஸ்டாலின் மாடல் அரசு, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை தகுதியின்றி நியமிக்க முயல்வதாக செய்திகள் வருகின்றன. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் தலைமையிலான முதல் பெஞ்ச் 2016-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஆள் சேர்ப்புக்கான விதிகளை தளர்த்துவது, தகுதியானவர்களை புறக்கணிப்பது நியாயமற்றது என்று கண்டித்து தகவல் மற்றும் சுற்றுலாத் துறை செயலாளர் மற்றும் தகவல் (ம) மக்கள் தொடர்பு இயக்குநருக்கு விதிகளைத் தளர்த்துவது, விதிவிலக்காக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, வழக்கமான நடைமுறையாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு இளங்கலை பட்டப் படிப்புடன், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் படிப்பு கட்டாயமாக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

    இது, தகுதியற்றவர்களையும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களையும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.

    மருத்துவராக இருக்க மருத்துவப் படிப்பும், வழக்கறிஞராக இருக்க சட்டப் படிப்பும் அவசியம் என்பது போல, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு, பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு அவசியம் என்பது அரசாணையில் தெளிவாக உள்ளது.

    இச்சூழ்நிலையில், திமுக அரசு இந்த அடிப்படைத் தகுதிகளை புறக்கணித்து, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்களை, பத்திரிகைத் துறையில் எந்த அனுபவமோ கல்வித் தகுதியோ இல்லாமல், தற்காலிக நியமனம் என்ற பெயரில் வயது, ஜாதி, மகளிர், ஊனமுற்றோர் ஒதுக்கீடு விதிகளுக்கு, விதிவிலக்கு அளித்து நியமிக்க முயல்வதாகத் தெரிய வருகிறது.

    மேலும், தேர்தல் ஆதாயத்திற்கு இவர்களைப் பயன்படுத்துவதற்கான உள்நோக்கமாகவே தோன்றுகிறது.

    பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் கல்வி கற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் இந்த முடிவு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிப்பதாக உள்ளது. இதற்கு மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, தற்காலிக நியமனம் என்ற பெயரில் தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும்; 2022-ஆம் ஆண்டு இந்த அரசு வெளியிட்ட அரசாணையின்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு முடித்தவர்களை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும் என பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    • முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதன்மூலம், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பொறுவார்கள் என்றும், மேலும், அறிவிப்பை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.

    முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள CoimbatoreMasterPlan2041-ஐ வெளியிட்டுள்ளோம்.
    • திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்.

    "தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றவுள்ள 'கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041'ஐ வெளியிட்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    #1TrillionDollar பொருளாதாரம் என்பது நமது இலக்கு! இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம்.

    அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள CoimbatoreMasterPlan2041-ஐ வெளியிட்டுள்ளோம்.

    எல்லோருக்கும் எல்லாம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான - சீரான வளர்ச்சி என்று திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.
    • சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

    பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

    இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள்.

    இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

    பின்னர், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

    இந்நிலையில், பாமக கொறடா எம்.எல்.ஏ. அருள் மாற்றம் என அன்புமணி தரப்பும், அருள் அப்பொறுப்பில் நீடிக்கிறார் என ராமதாஸ் தரப்பும் சட்டப்பேரவை செயலாளரிடம் அடுத்தடுத்து கடிதம் எழுதி வருகின்றனர்.

    அந்த வகையில், பாமக கொறடா பொறுப்பில் எம்.எல்.ஏ. அருள் தொடர்ந்து நீடிப்பார் என சட்டப்பேரவை செயலாளருக்கு ராமதாஸ் தரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

    • காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.
    • மாணவர் விடுதி மற்றும் தரக்கட்டுப்பாடு, பகுப்பாய்வகம் உள்ளிட்ட 52 கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் "ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.

    மேலும், 103 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையங்கள், 8 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், 10 துணை வேளாண் விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்புக் கிடங்குகள், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், 2 ஒருங்கிணைந்த விதைச்சான்று வளாகங்கள், அலுவலகக் கட்டிடம், மாணவர் விடுதி மற்றும் தரக்கட்டுப்பாடு, பகுப்பாய்வகம் உள்ளிட்ட 52 கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கடலூர் துறைமுகத்தை இயக்குவதற்காக மஹதி கடலூர் போர்ட் அன்ட் மேரிடைம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    • எதிர்க்கட்சியாக இருந்தால் தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?
    • விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு அவர்களின் கண்களில் குத்துவதுபோல் உள்ளது இந்த GO.

    த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழகத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    பரந்தூர் விமான நிலையம் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்.

    பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு புது விமான நிலையம் எதிர்த்து அப்பகுதி மக்களும், விவசாயிகளும் வருடக்கணக்காக போராடி வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் த.வெ.க. சார்பாக நான் சென்று பார்த்தேன்.

    அதற்கு அடுத்த நாளே மக்கள் பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று உங்கள் அரசு சார்பாக விளக்க அறிக்கை வந்தது.

    அந்த அறிக்கையில், 1500 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் வசிப்பதால் விமான நிலையம் வந்தால் பெரிய பாதிப்பு இருக்காது என்று சொல்லி இருந்தார்கள்.

    மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் என்ன என்னங்க சார்?

    ஒன்று அந்த இடத்தில் விமான நிலையம் வருகிறது என்று சொல்லணும்.

    இல்லைனா அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்று சொல்லணும்.

    இரண்டுமே அந்த அறிக்கையில் இல்லை.

    வெறும் 1500 குடும்பங்கள் என்று சொன்னால் அவ்வளவு சாதாரணமாக போய்விட்டதா CM சார்.

    15 ஆயிரம் மக்கள். அந்த மக்களும் நம்ம மக்கள் தானே.

    ஏன் அந்த அக்கறையோ, அந்த மனிதாபிமானமோ உங்களிடம் இல்லை.

    எதிர்க்கட்சியாக இருந்தால் தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?

    100-க்கணக்கான விவசாய நிலங்களை, மிகப்பெரிய நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான வீடுகளை அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து விமான நிலையம் கட்டியே ஆக வேண்டும் என்று என்ன சார் இருக்கு.

    அப்புறம் எப்படி சார் மக்களின் முதல்வர் என நா கூசாமல் பேசுகிறீர்கள்.

    இதுல வேற பரந்தூர் விமான நிலையத்திற்கும் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி காட்டிக்கொள்கிறீர்கள்.

    ஆனா விமான நிலையத்துக்காக பரந்தூரை பரிந்துரை செய்தது உங்கள் அரசு தான் என்று ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் சென்னை வந்தபோது சொன்னார். அதற்கும் உங்களிடம் இருந்து பதில் இல்லை.

    இந்த சூழ்நிலையில் பரந்தூர் விமான நிலைய பணிகளுக்காக கடந்த விவசாய நிலங்களை கையப்படுத்த கடந்த 25.6.2025 அன்று உங்கள் அரசுதான் அரசாணை பிறப்பித்துள்ளது.

    விமான நிலையம் அமைப்பதையே ஏற்க மாட்டோம் என்று வருஷக்கணக்காக மக்களின் நிலங்களையும் சேர்த்தே கையகப்படுத்த அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டிய தமிழ்நாடு அரசு அவர்களின் கண்களில் குத்துவதுபோல் உள்ளது இந்த GO.

    இதெல்லாம் உங்களுக்கு தெரிந்துதான் நடக்கிறதா? உங்களின் ஒப்புதலோடுதான் நடக்குதா? தெரியவில்லை. பதிலும் தெரியவில்லை.

    பரந்தூர் மக்களை ஏன் இன்னும் சந்திக்கவில்லை என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

    பரந்தூர் மக்களை சமீபத்தில் நான் சந்தித்தேன். அவர்கள் சொன்னதை கேட்டு மிகவும் கஷ்டமாக இருந்தது.

    இப்பவும் எதுவும் குறைந்துவிடவில்லை CM சார்.

    சாதி, மதம் கடந்து, தங்கள் குடியிருப்புகளை, விவசாய பூமியை, வாழ்வாதாரத்தை, நீர் நிலைகளை காப்பாற்ற ஒன்றாக நின்று போராடிக்கொண்டிருக்கும் பரந்தூர் மக்களை நீங்கள் சந்தித்து பேசுங்கள்.

    உங்களுடைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்தித்து பேசக்கூடாது. நீங்களே நேரில் சந்தித்து பேச வேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

    இதையெல்லாம் நீங்கள் செய்யாமல் கடந்து போக வேண்டும் என்று நினைத்தால், பரந்தூர் மக்களையும் விவசாயிகளையும் அழைத்து வந்து தலைமை செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும்.

    அதுபோன்ற சூழலை நீங்கள் உருவாக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை அதுபோன்ற ஒரு சூழல் வந்தால் நான் அதை எதிர்க்கொள்ள தயாராக இருக்கிறேன்.

    பரந்தூரை தேர்ந்தெடுத்தது தான் தவறு என்கிறோம். இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. விமான பாதுகாப்பு நிபுணர்கள் (Aviation Safety Experts) உறுதி செய்துள்ளனர்.

    நீர்நிலைகளை அழித்து விமான நிலையம் வந்த பிறகு, மழைக்காலத்தில், வெள்ளம் ஏற்பட்டால் மொத்த சென்னையும் வெள்ளக்காடாகும். இதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையெல்லாம் மனதில் வைத்து, தயவுசெய்து please take a call.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக கட்சியும் இணையலாம் என்று பேசப்பட்டது.
    • தவெக தலைமையில் கூட்டணி உருவாகும் என்று அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக எதிரெதிர் துருவங்களாக களம் காண்கின்றன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் விரிசல் இல்லை. எனினும், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தல் கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

    மறுப்பக்கம் அதிமுக தலைமையில் தேர்தல் கூட்டணி உருவாகி இருக்கிறது. அதில் தற்போது பாஜக இடம்பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமின்றி அமமுக இடம்பெற்றுள்ளது. இதுதவிர தேமுதிக கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவில்லை. சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேமுதிக தெரிவித்து இருக்கிறது.

    இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக கட்சியும் இணையலாம் என்று பேசப்பட்டது. தவெக தலைவர் விஜய் தனது கட்சி தொடங்கியது முதலே திமுக மற்றும் பாஜக கட்சிகளை மட்டும் கடுமையாக சாடி வந்தார். மேலும், தவெக-வின் அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் குறிப்பிட்டார்.

    அரசியலில் களமிறங்கியதுமே மாநிலத்தில் திமுக, மத்தியில் பாஜக-வை எதிர்த்து அரசியல் செய்யப்போவதை தவெக தலைவர் விஜய் உறுதிப்பட தெரிவித்துவிட்டார். இதன் காரணமாக 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் என்ற பேச்சு எழுந்தது. வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில், தவெக அதில் இணையுமா என்ற கேள்வியும் ஒருபக்கம் எழுந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைமையில் கூட்டணி உருவாகும் என்று அக்கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி அல்லது தன் தலைமையிலான கூட்டணியுடன் தான் போட்டி என்ற நிலைப்பாட்டில் இருப்பதை தெளிவுப்படுத்தி உள்ளார்.

    மேலும், இன்றைய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், பாஜக-வுடன் கூட்டணி அமைக்க தவெக ஒன்றும் அதிமுக, திமுக கிடையாது. திமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிப்பட தெரிவித்தார். இதுவரை தவெக தலைமையிலான கூட்டணியில் வேறு கட்சிகள் இணைந்துள்ளது பற்றி எந்த தகவலும் இல்லை.

    தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட உச்ச நடிகராக கட்சி தொடங்கியிருக்கும் விஜய், முதல் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார், தேர்தலில் அவரது தவெக கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா என்பதை காலம் தான் சொல்லும்.

    • தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
    • அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்.

    சென்னை:

    பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

    முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அவருக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பொன்முடியின் பேச்சு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நேரத்தில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்பின், பொன்முடிக்கு எதிராக 3 போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தியதில், அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக்கூறி, அந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

    அதன்பிறகு, தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை தான் பொன்முடி குறிப்பிட்டு பேசினார் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகார்கள் மீது காவல் துறையினர், புலன் விசாரணை செய்ய தயங்கினால், விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என எச்சரித்த நீதிபதி, பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

    அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல விஷயங்களை சொல்லியிருக்கலாம் எனக் கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 8-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • பரந்தூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மக்களின் முதல்வர் என நா கூசாமல் பேசுகிறீர்களே எப்படி?
    • பரந்தூர் பகுதி விவசாய பெருங்குடி மக்களை தயவு செய்து சந்தித்து பேசுங்கள்.

    சென்னை:

    த.வெ.க. செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழகத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார்.

    இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * பரந்தூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மக்களின் முதல்வர் என நா கூசாமல் பேசுகிறீர்களே எப்படி?

    * பரந்தூர் பகுதியை சுற்றி வசிக்கும் 1500 குடும்பங்கள் முதலமைச்சருக்கு சாதாரணமாக போய்விட்டதா?

    * பரந்தூர் மக்களை ஏன் இன்னும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை.

    * பரந்தூர் பகுதி விவசாய பெருங்குடி மக்களை தயவு செய்து சந்தித்து பேசுங்கள்.

    * பரந்தூர் விவசாயிகளை முதலமைச்சர் சந்திக்காவிடில் அவர்களை நானே அழைத்துக்கொண்டு தலைமைச்செயலகம் வருவேன்.

    * விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர் சரியான இடம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜக உடன் கூட்டணி வைக்க த.வெ.க. ஒன்றும் அதிமுக, திமுக கிடையாது.
    • திமுக, பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் ஒருபோதும் சமரசம் இல்லை.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-

    மத்திய அரசு அளவில் மலிவான அரசியல் ஆதாயத்திற்காக மக்களை மத ரீதியாக பிளவுப்படுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கிறது பாஜக. அவர்களுடைய இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது.

    சமூக நீதியும், நல்லிணக்கமும், சகோரத்துவமும், சமத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண். எனவே இங்கே தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ தமிழ்நாட்டில் உள்ள மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் அதனால் பாஜகவால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.

    சுயநல அரசியல் லாபங்களுக்காக கூடி குலைந்து கூட்டணி போக தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவோ, திமுகவோ இல்லை.

    கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவே கூட்டணி இல்லை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது.

    கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவுக்கு எதிராகத்தான் இருக்கும் என்பதையும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம். இது இறுதியான தீர்மானம் அல்ல. உறுதியான தீர்மானம்.

    நாம் எல்லோருக்கும் வாழ்வாதாரம் இருக்கும். இல்லை என்று சொல்லவில்லை. நம்முடைய வாழ்வாதாரத்தில் விவசாயிகள் முக்கியமானவர்கள். அப்படிப்பட்ட விவசாயிகளுடன் நிற்க வேண்டியது நமது கடமை. அந்த கடமையை நாம் சரியாக செய்தே ஆக வேண்டும். நாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்போம், நிற்போம், நிற்போம். நின்றே தீருவோம்.

    • 200 தொகுதிகளை குறி வைத்து தி.மு.க. ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது.
    • எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

    சென்னை:

    2026 சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கி உள்ளன.

    ஆளும் தி.மு.க. 200 தொகுதிகளை குறி வைத்து ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டது. மேலும், 2 கோடி உறுப்பினர் சேர்க்கை பணிகளையும் தி.மு.க. தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட தயாராகி வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 7-ந்தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார்.

    இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அமித்ஷா, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்றார்.

    இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணைவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான நகர்வுகள் நடைபெறுகிறது என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எங்கள் கூட்டணியில் விஜய் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. நல்லதே நடக்கும் என்றார்.

    இந்த நிலையில், இன்று நடைபெற்ற த.வெ.க. செயற்குழு கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையில் கூட்டணி, விஜயே முதலமைச்சர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதனால், விஜய் வருகிற சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடக்கூடும் என்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 

    ×