என் மலர்
நீங்கள் தேடியது "எம்எல்ஏ அருள்"
- ஆத்திரமடைந்த அருள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சிலர் ராஜேஷை தாக்கினர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பா.ம.க. அருள் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதற்கிடையே கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கார் மீது கல்வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே இருதரப்பினக்கும் வடுகத்தம்பட்டி பகுதியிலேயே மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
ராமதாஸ் அணி சார்பாக சேலம் தொகுதி எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்ட கார்களில் நேற்று காலை 11.30 மணியளவில் வடுகத்தம்பட்டி பகுதிக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பாக்கு காய்கள் காய வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், துக்க வீட்டிற்கு சென்ற நேரத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகே இருந்த அன்புமணி ஆதரவாளரான விவசாயி ராஜேஷ் என்பவர், அருள் எம்.எல்.ஏ. ஆதரவாளரின் கார் கண்ணாடியை தட்டி இந்த இடத்தில் காரை நிறுத்த வேண்டாம், வேறு இடத்தில் நிறுத்துங்கள் என்று சொன்னதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அருள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சிலர் ராஜேஷை தாக்கினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன் தொடா்ச்சியாக தான் அருள் எம்.எல்.ஏ. சென்ற கார் மீது தாக்குதல் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அருள் பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார்.
- அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார்.
சேலம்:
சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் இன்று தனது ஆதரவாளர்களுடன் காரில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகி துக்க வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சேலம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். திடீரென அவர்கள் கார்களை வழிமறித்து நிறுத்தி அருள் எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் திடீரென அவர்கள் அருள் எம்.எல்.ஏ. சென்ற கார் மற்றும் அவருடன் சென்ற 15-க்கும் மேற்பட்ட கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த கார்களின் கண்ணாடி உடைந்து சேதமானது.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்த மோதல் பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அருள் எம்.எல்.ஏ.வை மீட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். அருள் எம்.எல்.ஏ. கூறும்போது, என்னை கொலை செய்யும் முயற்சியில் தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தார்.
- எங்கள் வீட்டில் 4 டாக்டர். மருத்துவர் அய்யா போட்ட பிச்சை. அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு.
- அய்யாவை பார்த்து இந்த கட்சிக்கு வந்தேன்.
திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க. செயற்குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கூறியதாவது:
அப்பல்லோ மருத்துவமனை கட்டி உள்ளாரே ரெட்டி அவரைப்போல அய்யாவாலும் பெரிய ஆளாக வந்திருக்க முடியும்.
அன்றைக்கு எங்கேயோ ஒரு டாக்டர் தான் இருப்பார்கள். இன்றைக்கு ஊர் ஊருக்கு டாக்டர்.
யாரால் ஊர் ஊருக்கு டாக்டர். எங்கள் வீட்டில் 4 டாக்டர். மருத்துவர் அய்யா போட்ட பிச்சை. அவர் பெற்றுக்கொடுத்த இடஒதுக்கீடு.
இன்று வெள்ளை சட்டை போட்டு இருக்கிறேன் என்றால் அது என் தம்பி எடுத்துக்கொடுத்தது. நான் வந்த கார் என் தம்பி வாங்கி கொடுத்தது. இதையெல்லாம் தம்பி வாங்கி கொடுத்தான் என்று தான் பேரு. ஆனால் அதற்கு காரணம் குலதெய்வம் மருத்துவர் அய்யா.
இப்படிப்பட்டதெய்வத்தை ஒரு நிமிடம் கூட நாம் மறந்தோம் என்றால் நாம் அழிந்து போவோம்.
இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவரும் மருத்துவர் அய்யாவை தெய்வமாக பார்க்க வேண்டும். அய்யா சொல்வதை செய்ய தயாராக இருக்கிறோம். அய்யாவை பார்த்து இந்த கட்சிக்கு வந்தேன்.
நீங்கள் எனக்கு மேயர் சீட், எம்.எல்.ஏ. சீட், இன்னும் பல பதவிகள் கொடுத்தீர்கள், இன்றைக்கு இணைப்பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவி கொடுத்து உள்ளீர்கள்.
அய்யா அவர்கள் விரும்பியது இட ஒதுக்கீடு. அந்த இட ஒதுக்கீட்டிற்காகத்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டதாக சொல்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் கிடையாது. என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கோ, பொறுப்பு மாற்றுவதற்கோ அதிகாரம் உள்ளவர் மருத்துவர் அய்யா மட்டும் தான்.
அருள் உன் உயிர் எனக்கு வேண்டும் என்று அய்யா சொன்னால் இந்த டி.வி.க்காரர்கள் முன்னாடி என் கழுத்தை அறுத்துக்கொண்டு சாவதற்கு தயாராக உள்ளேன்.
என்றைக்கும் என் தலைவர்... என் உயிர் உள்ளவரை, என் மகன் உள்ளவரை, என் குடும்பம் உள்ளவரை மருத்துவர் அய்யா நீங்கள் மட்டுமே என்று கூறினார்.
- அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.
- சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள்.
இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
பின்னர், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
இந்நிலையில், பாமக கொறடா எம்.எல்.ஏ. அருள் மாற்றம் என அன்புமணி தரப்பும், அருள் அப்பொறுப்பில் நீடிக்கிறார் என ராமதாஸ் தரப்பும் சட்டப்பேரவை செயலாளரிடம் அடுத்தடுத்து கடிதம் எழுதி வருகின்றனர்.
அந்த வகையில், பாமக கொறடா பொறுப்பில் எம்.எல்.ஏ. அருள் தொடர்ந்து நீடிப்பார் என சட்டப்பேரவை செயலாளருக்கு ராமதாஸ் தரப்பு கடிதம் எழுதியுள்ளார்.
- சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
- எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
பா.ம.க.வில் தற்போது நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக நிறுவனர் ராமதாஸ் ஒரு அணியாகவும், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஒரு குறிப்பிட்ட நிர்வாகிகளை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பா.ம.க.வில் சட்டமன்ற கட்சி கொறடாவாக உள்ள அருளுக்கு எதிராக அன்புமணி சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்தனர்.
சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலரை சந்தித்து மனு அளித்த பின்னர் வழக்கறிஞர் பாலு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அருள் நீக்கப்பட்டுள்ளார்.
பா.ம.க. சட்டசபை கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- அன்புமணியால் ராமதாசுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
- தெருவில் இலந்தை பழம் விற்பது கேவலமா?
சேலத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட எந்த பதவிகளுக்கும் ஆசைப்படாதவர் ராமதாஸ்.
* அன்புமணியால் ராமதாசுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
* ராமதாஸ் தான் பா.ம.க.விற்கு தாய். சுயம்புவாக கட்சியை வளர்த்தவர் ராமதாஸ்.
* 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தையாக மாறி விட்டார் என அன்புமணி சொல்கிறார். அந்த குழந்தைதானே 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக அறிவித்தது. குழந்தையின் அறிவிப்பு எப்படி செல்லும்?
* தெருவில் இலந்தைப் பழம் விற்பவர் கேவலமானவரா? ராமதாஸை அவமானப்படுத்துவதாக நினைத்து, தெருவோர வியாபாரிகளை, பாட்டாளிகளை அவமானப்படுத்தியுள்ளார் அன்புமணி.
இவ்வாறு அவர் கூறினார்.
ரோட்டில் இலந்தைப் பழம் விற்பவர்களை அழைத்து ராமதாஸ் பதவி தருவதாக அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம்.
- பிரச்சனை முடிய வேண்டும் என்று எனக்கு மட்டுமல்ல 2 1/2 கோடி வன்னியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதே ஆசை தான்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் வந்தார்.
தைலாபுரம் தோட்டத்தில் பா.க.ம. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளலர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது அதற்காக வந்துள்ளேன்.
கேள்வி:-ஆலோசனை கூட்டத்தில் ஏதேனும் முக்கிய முடிவு அல்லது பொதுக்கூட்டம் எது சம்பந்தமாக முடிவெடுக்க வாய்ப்புள்ளதா?
பதில்:- டாக்டர்.ராமதாஸ் சொல்வது தான் முடிவு. அவர் சொல்வதை செய்யப் போகிறோம்.
கேள்வி:- டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் இணைய வலியுறுத்தி உள்ளீர்களா?
பதில்:- தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
கேள்வி:- இணைவதற்கு வாய்ப்பில்லை என சிலர் கூறுகிறார்களே...
பதில்:- அப்படி இல்லை இணைவார்கள். எங்களது ஆசை இணைவது தான்.
பதில்:- அவரை பார்ப்பதும், பேசுவதும் புதியது அல்ல. அன்புமணி ராமதாஸ் எனது அண்ணன்.
கேள்வி:- உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது உங்களை அன்புமணி சந்தித்தாரா?
பதில்:- இல்லை.
கேள்வி:- சேலத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உங்களுக்கு கூட்டுப்பிரார்த்தனை செய்தார்களே
பதில்:- கூட்டுப் பிரார்த்தனை என்பதை கலசம் வைத்து தான் பண்ண வேண்டும். நான் சாகவில்லை உயிரோடு தான் இருக்கிறேன். கூட்டுப்பிரார்த்தனை என்றால் இறந்தவர்களுக்கு தான் பண்ண வேண்டும்.
கேள்வி:- நீங்கள் சேலத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தை புறக்கணிப்பதற்காக தான் உடல்நிலை சரியில்லை என்று கூறினீர்களா?
பதில்:- யார் சும்மா, சும்மா போய் மருத்துவமனையில் படுப்பார்களா. நான் தனியார் மருத்துவமனையில் படுக்கவில்லை. சென்னை ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டேன். நீங்கள் அரசு மருத்துவமனையில் சென்று கேளுங்கள். எனக்கு என்னவென்று கேட்டால் கண்டிப்பாக கொடுப்பார்கள். மனம் அழுத்தம் அதனால் தான் மருத்துவமனைக்கு சென்றேன்.
பதில்:- டாக்டர்.ராமதாஸ் என்னுடன் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறார்.
கேள்வி:- பிரச்சனைக்கு எப்பொழுது முடிவு வரும்.
பதில்:- பிரச்சனை முடிய வேண்டும் என ஆசை தான். எனக்கு மட்டுமல்ல 2 1/2 கோடி வன்னியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதே ஆசை தான் விரைவில் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
- தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த சந்திப்பு கூட்டம் நாளை வரை நடக்க உள்ளது.
சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து இன்று 2-வது நாளாக தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டத்தை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
- ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அருள் எம்.எல்.ஏ.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. அருள் மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ. அருள், ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க. அரசியல் பண்ண விரும்பலை. நல்ல ஒழுங்கத்த கத்தக்கொடுக்கற இடத்தில உங்களுக்கு அவமரியாதை, அசிங்கப்படுத்திட்டாங்க. கட்சிக்காக பேசலை. மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
- பெற்றோர், பள்ளி நுழைவாயிலில் திரண்டு பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.
- பா.ம.க எம்எல்ஏ அருள் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளி, விளையாட்டு மைதானம் ஏற்கனவே விற்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், பள்ளி கட்டிடம் வேறு ஒரு தனியாருக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனை அறிந்த பெற்றோர், பள்ளி நுழைவாயிலில் திரண்டு பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பா.ம.க எம்எல்ஏ அருள் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பாமக எம்எல்ஏ அருள் திடீரென பள்ளி தாளாளர் காலில் விழுந்து, "பள்ளியை மூடும் எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்க.. பள்ளியை மூடாதீங்கம்மா" என்று கெஞ்சினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.






