என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பள்ளியை மூடாதீங்க மா.. பள்ளி தாளாளர் காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க எம்எல்ஏ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பள்ளியை மூடாதீங்க மா.. பள்ளி தாளாளர் காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க எம்எல்ஏ

    • பெற்றோர், பள்ளி நுழைவாயிலில் திரண்டு பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.
    • பா.ம.க எம்எல்ஏ அருள் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளி, விளையாட்டு மைதானம் ஏற்கனவே விற்கப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், பள்ளி கட்டிடம் வேறு ஒரு தனியாருக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனை அறிந்த பெற்றோர், பள்ளி நுழைவாயிலில் திரண்டு பள்ளி தொடர்ந்து செயல்பட வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

    இந்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பா.ம.க எம்எல்ஏ அருள் பள்ளி தாளாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பாமக எம்எல்ஏ அருள் திடீரென பள்ளி தாளாளர் காலில் விழுந்து, "பள்ளியை மூடும் எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்க.. பள்ளியை மூடாதீங்கம்மா" என்று கெஞ்சினார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×