என் மலர்
சென்னை
- நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்.
- எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்.
மதுரையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்" என்று தெரிவித்து இருந்தார்.
மாணிக்கம் தாகூரின் பேச்சு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
'அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்ப தில்லையே' என்ற பாரதியாரின் வரிகளை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பு குறித்து அறிக்கை வழங்கியதாக செல்வப்பெருந்தகை பேட்டி அளித்த நிலையில் மாணிக்கம் தாகூர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
- தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடுவதா? அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
- பொள்ளாச்சி, வேலூரில் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:
சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதையொட்டி தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணியில் தற்போது த.வெ.க. ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநில நிர்வாகிகளை கொண்ட குழுவும் அறிவிக்கப்பட்டது. பொது மக்கள் கருத்து தெரிவிக்க புதிய இணையதளமும் தொடங்கப்பட்டது.
தேர்தல் அறிக்கை குழுவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இணையதளத்திலும் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்துகளை தேர்தல் அறிக்கையில் இணைக்கும் பணியை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் செய்து வருகின்றனர்.
கடந்த கால தேர்தல்களிலும், தற்போதும், தி.மு.க., அ.தி.மு.க.. தேர்தல் அறிக்கைகளில் இலவசங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், த.வெ.க தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம் பெறுமா? அல்லது இலவசங்கள் இல்லாத மாற்று திட்டங்கள் இடம் பெறுமா? என்பது மிகுந்த எதிர்பார்ப்புமிக்கதாக மாறியுள்ளது.
இந்தநிலையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை பொதுமக்கள் விரும்பும் வகையில் பல முக்கிய அம்சங்களுடன் வருகிற 27-ந்தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடுவதா? அல்லது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் வெளியிடுவதா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பொள்ளாச்சி, வேலூரில் அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக போலீஸ் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
- முதலாவது பொதுத்தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம்.
சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதில் முதலாவது பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்புபவர்களுக்காக இரண்டாவது தேர்வு வசதி செய்யப்பட்டு உள்ளது.
அதேநேரம் முதலாவது பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.
இன்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும், 21-ந்தேதி ஆங்கிலமும், 25-ந்தேதி அறிவியலும், மார்ச் 2-ம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7-ந்தேதி சமூக அறிவியல் பாட தேர்வும் நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று உடற்கல்வி தேர்வு, 20-ந் தேதி இயற்பியல், 28-ந்தேதி வேதியியல், மார்ச் 9-ந்தேதி கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் இத்தேர்வினை எழுதுகிறார்கள்.
இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலாவது பொதுத்தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம். இதில் வெற்றி பெறும், தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பா டம் என ஏதாவது 3 பாடங்களில் 2-வது தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
முதலாவது பொதுத்தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதாத மாணவர்கள், 2-வது பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அவர்கள் 'மீண்டும் கட்டாயம்' என்ற பிரிவுக்கு தள்ளப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பிரதான (முதலாவது பொதுத்தேர்வு) தேர்வில்தான் பங்கேற்க முடியும்.
இவ்வாறு சன்யம் பரத்வாஜ் கூறினார்.
- 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட் டத்தொடர் இதுவாகும்.
- வேளாண் பட்ஜெட்டு இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால் அவையில் அவர் உரையில் இல்லாதவற்றை பேசிவிட்டு வெளியேறினார். அவரது பேச்சு எதுவும் அவைக்குறிப்பில் பதிவாகவில்லை.
கவர்னருக்கு தரப்பட்ட உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். சட்டசபையில் கவர்னர் உரை என்ற நடைமுறை தேவையில்லை என்பதற்கான அரசியல் சாசன திருத்தத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 22, 23-ந் தேதிகளில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 24-ந் தேதி பதிலளித்து பேசினார்.
அதன்பின்னர் சட்டசபை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கும் தீர்மானத்தை அமைச்சர் எ.வ.வேலு முன்மொழிய, அது நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவை மறுபடி கூடும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்தநிலையில் சட்டசபையின் அடுத்த கூட்டத்தை இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் அப்பாவு கூட்டியுள்ளார். காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், அவைக்கு அளிக்கப்படும். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட் ஜெட் உரையை படிப்பார்.
இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை மற்றும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வருகிற 20-ந் தேதி அவைக்கு அளிக்கப்பட உள்ளது.
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பதற்கான முடிவுகள், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும்.
இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் (அதாவது 20-ந் தேதி வரை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்தளிக்கும் இடைக்கால பட்ஜெட் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதிப்பார்கள். அந்த விவாதங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார்.
2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவி ஏற்ற இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும். சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, வரும் மே மாதம் புதிய அரசு தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத் தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
தேர்தலுக்கு பிறகு மே மாதத்தில் அமையும் புதிய ஆட்சியில் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அரசுத் துறைகளுக்கு மானியக் கோரிக்கைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 3-ம் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட்டை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் கடுமையான தேர்தல் போட்டி நிலவுவதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், மகளிர் உரிமைத்தொகை, சிறப்புத்தொகை என ரூ.5 ஆயிரத்தை பெண்களுக்கு அனுப்புவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்கான நிதி ஆதாரங்களை கேட்டு அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அவையில் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.
மேலும் தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகள், போராட்டங்கள் பற்றி அவையில் பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்ளும். இதில் வெளிநடப்பு, வெளியேற்றம் போன்ற சம்பவங்கள் நேரிடவும் வாய்ப்புள்ளது.
அரசியல் ரீதியாக கவனித்தால், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடையே இன்னும் ஏற்படாத கூட்டணி உறவும் இந்த கூட்டத்தொடரில் எதிரொலிக்கக்கூடும்.
வேளாண் பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு வாசித்து முடித்ததும், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை அவையில் படிப்பார்.
- பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.
- இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது
மதுரையில் இன்று காலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,"விஜய் கூட்டங்களில் உயிரிழப்புகள் நடந்தது நல்ல சகுணம் தானே" என சிரித்துக் கொண்டே பேசினார்.
இதற்கு தவெக தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. தவெக பரப்புரை செயலாள் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு"நல்ல சகுனம்" என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.
அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் "கொத்தடிமை ஊதுகுழலாக" மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் "கள்ளக்கூட்டணி" தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணை போகும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த "கள்ளக்கூட்டணி" மனநிலை அருவருக்கத்தக்கது.
ஒரு இழப்பை ஏளனம் செய்வது, தமிழக வெற்றிக் கழகத்தின் கோடிக்கணக்கான தம்பிகளின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற தலைவர்கள், வரும் தேர்தலில் மக்களால் தக்க பாடம் புகட்டப்படுவார்கள்.
அறிவாலயத்தின் ஆணைக்கிணங்க செயல்படும் இத்தகைய ஊதுகுழல்கள், நமது கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் போடும் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.
தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 50 கருங்கல் குவாரிகளை புதிதாகத் திறக்க திமுக அரசு அவசர, அவசரமாக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.
- தமிழக வரலாற்றில் ஒரே மாதத்தில் இவ்வளவு குவாரிகள் ஏலம் விடப்பட்டதில்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் சேலம், இராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 50 கருங்கல் குவாரிகளை புதிதாகத் திறக்க திமுக அரசு அவசர, அவசரமாக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. தமிழக வரலாற்றில் ஒரே மாதத்தில் இவ்வளவு குவாரிகள் ஏலம் விடப்பட்டதில்லை எனும் நிலையில், 50 குவாரிகளுக்கு குத்தகை வழங்குவதிலிருந்தே திமுக அரசு கிடைத்தவரை சுருட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உரிமம் பெற்று 1845 கருங்கல் குவாரிகள், சட்டவிரோதமாக 2000-க்கும் மேற்பட்ட குவாரிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்குவாரிகள் அனைத்திலுமே விதிகளை மீறி கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தான் கூடுதலாக 50 குவாரிகளுக்கு உரிமம் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளது.
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இந்த குவாரிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்குவதற்கான ஏல ஒப்பந்த அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். முடிந்தவரை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே குத்தகை வழங்குவதற்கான நடைமுறைகளை முடிக்க திமுக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் ஆகியவற்றை மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக அரசு இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதில் எந்த வியப்பும் இல்லை.
ஆட்சிக்காலத்தின் கடைசி கட்டத்தில் இருக்கும் எந்த அரசும் இவ்வளவுக் கொள்ளை அடித்ததில்லை என்று கூறும் அளவுக்கு திமுக அரசு கடைசி நேரக் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய ஊழல்கள் என்றால், அது ஆற்று மணல் கொள்ளையும், இயற்கை வளக் கொள்ளையும் தான். இந்தக் கொள்ளைகளில் ஆண்டு மதிப்பு ரூ.80 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. மக்கள் நலனிலும், நேர்மையான நிர்வாகத்திலும் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், இயற்கைவளக் கொள்ளைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை திமுக செய்யவில்லை.
மாறாக, கனிமவளக் கொள்ளையர்களின் கனிமக் கொள்ளைக்கு துணை போகும் வகையில் பாவ மன்னிப்பு வழங்கும் திட்டத்தை திமுக அரசு அண்மையில் செயல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உரிமம் பெற்ற குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிமங்களுக்கு ராயல்டி தொகையாக டன்னுக்கு ரூ.25 நிர்ணயம் செய்யப்பட்டு, அத்துடன் இரு மடங்கு தொகையை சேர்த்து, அதாவது மொத்தமாக ஒரு டன்னுக்கு ரூ.75 செலுத்தி விட்டால் கனிமக் கொள்ளையர்கள் மன்னிக்கப்படுவர். உரிமம் பெறாத குவாரிகளில் கனிமக் கொள்ளை நடத்தியவர்கள் ராயல்டி தொகையுடன் 5 மடங்கு அபராதம் சேர்த்து ரூ.150 செலுத்தி விட்டால் அவர்கள் பாவ விமோசனம் பெற்று உத்தமர்களாகி விடுவார்கள். அதுவும் கூட அவர்கள் அந்த அபராதத் தொகையை ஒரே தவணையாகக் கூட செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அதிகபட்சமாக 24 மாதங்களுக்குள் அபராதத்தை செலுத்தினால் போதுமானது. இதை விட மோசமாக எந்த அரசாலும் கனிமவளக் கொள்ளையர்களுக்கு துணை போகவே முடியாது.
இன்னொரு பக்கம் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவருக்கு சொந்தமான கல் குவாரிகளில் சட்டவிரோதமாக நடத்தப்படும் கனிமக் கொள்ளைகளை படம் பிடித்த ஊடகவியலாளர்கள் கடத்திச் செல்லப் பட்டு சிறை வைக்கப்படுகிறார்கள். அவர்களை ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினரே கொடூரமாகத் தாக்குகிறார். அது குறித்த காணொலி ஆதாரம் வெளிவந்த பிறகும் கூட அந்த சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்படவில்லை. பா.ம.க.வும் பிற எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்த பிறகு தான் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது பெயரளவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அதை விட கடுமையான பிரிவுகளில், கனிமக் கொள்ளையை படம் பிடித்து வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி தொடர்ச்சியாக கனிமக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் திமுக அரசு, இப்போது கனிமக் கொள்ளையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தான் 50 புதிய கல்குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை செயல்பாட்டில் உள்ள கல்குவாரிகளில் பெரும்பாலானவை தனியார் பட்டா நிலங்களில் அமைந்திருக்கும் நிலையில், இப்போது உரிமம் வழங்கப்படும் குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்படவுள்ளன. இதன் பின்னணியில் பலநூறு கோடி கைமாறியிருப்பதாக கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் அனைத்துத் துறைகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவது, அரசுத் துறைகளில் பணம் இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி இப்போதே ஒப்பந்தம் வழங்குவது, அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்தங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்வது போன்றவற்றில் திமுக ஈடுபட்டிருப்பதற்கு அண்மைக்காலங்களில் ஏராளமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. அந்த முயற்சிகளில் அடுத்தக் கட்டம் தான் இந்த ஏலம் ஆகும்.
ஆளில்லாத வீட்டில் கிடைத்தவரை சுருட்டுவதைப் போலத் தான் திமுக அரசு கடைசி நேர ஊழல்களிலும், கொள்ளையிலும் ஈடுபட்டு வருகிறது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கனிமக் கொள்ளை திமுக அரசை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்.
- 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
- எஸ்.பி.முத்துராமன் தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகைகளில் ஒருவரான நடிகை எம்.என். ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-ல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவர். 1950 மற்றும் 1960 களில் முன்னணி நாயகியாக விளங்கினார்.
ரத்தக் கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், மங்கையர் திலகம் போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றார். 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.
இத்தகைய பெருமைக்குரிய பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
எஸ்.பி.முத்துராமன் தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆவார். 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது திரைத்துறை பணியை தொடங்கி, பின்னர் 1970 முதல் 1990-ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான இயக்குநராக உயர்ந்தார்.
இவர் 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கி மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் அவருக்கு 2025-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி சிறப்பித்தார்.
விருது பெற்ற பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோருக்கு விருதுடன் ரொக்கப் பரிசாக தலா 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்தி நாதன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், எம்.என்.ராஜம் மற்றும் எஸ்.பி. முத்துராமன் ஆகியோரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
- பனிமூட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
- அனைத்து ரெயில்களிலும் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டன.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. கடந்த 2 நாட்களாக பனி மூட்டம் அதிகரித்து வருவதால் பொது மக்கள் வெளியில் நடமாடவே தயங்குகிறார்கள்.
குளிருடன் பனியும் சேர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று பனிமூட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மின்சார ரெயில்கள் அதிகாலையில் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு பணி சூழ்ந்திருந்ததால் முகப்பு விளக்குகள் போடப்பட்டு இயக்கப்பட்டன.
இதனால் குறைந்த வேகத்திலேயே மின்சார ரெயில்கள் சென்று வந்தன. இதேபோல வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வேகம் குறைக்கப்பட்டு மெதுவாக நிலையங்களுக்கு வந்து சேர்ந்தன. சென்ட்ரல் , எழும்பூர் நிலையங்களுக்கு அதிகாலை 3 மணியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவது வழக்கம்.
அவ்வாறு வந்த அனைத்து ரெயில்களிலும் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டன. காலை 7 மணி வரை மேகத்துடன் பனிமூட்டமும் சேர்ந்து காணப்பட்டதால பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
பஸ் மற்றும் கார், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சாலை தெளிவாக தெரியாததால் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி சென்றனர்.
- சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டது.
- யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் காலியில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் இன்று காலை தெரிவித்தது.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள், காகிதத்திலான பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்றும் யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஒன் செயலி வழக்கம்போல் செயல்படுவதாக MTC விளக்கம் அளித்துள்ளது. தங்கள் பயணங்களுக்கான டிக்கெட்டை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
- 4-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
தங்கம் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஏற்ற இறக்கமாக விற்பனையாகிறது. சென்னையில் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு பவுன் தங்கம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை பவுனுக்கு ரூ.20 ஆயிரம் குறைந்து ஏற்ற இறக்கமாக விற்பனையாகி வருகிறது.
கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600 ஆக குறைந்தது. 3-ந்தேதி ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160 ஆகவும், 4-ந்தேதி ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200 ஆகவும் அதிகரித்தது. 5-ந்தேதி ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560 ஆகவும், 6-ந்தேதி ரூ.1 லட்சத்து 14 ஆயிரமாகவும் குறைந்தது.
கடந்த 7-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 360 ஆகவும், 9-ந்தேதி ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200 ஆகவும் அதிகரித்தது. 10-ந்தேதி ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 640 ஆக குறைந்தது. 11-ந்தேதி ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 320 ஆக அதிகரித்தது. 12-ந்தேதி ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800 ஆகவும், 13-ந்தேதி ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 200 ஆகவும் குறைந்தது.
கடந்த 14-ந்தேதி தங்கம் விலை அதிகரித்து பவுன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 480-க்கு விற்கப்பட்டது. நேற்றும் அதே விலையே நீடித்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 520-க்கு விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 560-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14 ஆயிரத்து 440-க்கு விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று 4-வது நாளாக மாற்றம் இல்லை. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள்.
- இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது.
சென்னை:
மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள், காகிதத்திலான பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்றும் யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும், 'சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகளின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






