search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் விபத்தில் சிக்கி  வீடு திரும்பிய சிறுவன் பலி
    X

    கோவையில் விபத்தில் சிக்கி வீடு திரும்பிய சிறுவன் பலி

    • மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தடுமாறி கீழே விழுந்தார்.
    • சிறுவன் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை

    கோவை ஜி.என்.மில் விவேக் நகரை சேர்ந்தவர் தர்ஷன் (வயது 17). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை-மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அருகே சென்றார்.

    அப்போது சேரன் நகர் அருகே வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.அப்போது அவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீண்டும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறுவன் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×