search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்த பாரதிய ஜனதா கட்சியினர்
    X

    பாரதிய ஜனதா கட்சியினர் பிரார்த்தனை செய்த காட்சி.


    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்த பாரதிய ஜனதா கட்சியினர்

    • தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பனிமய மாதா ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் வக்கில் வாரியார் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபட்டு வருகின்றனர். இந்த ஆலய திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பனிமய மாதா ஆலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

    நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கில் வாரியார், சிவராமன், இளைஞரணி மாவட்ட தலைவர் விக்னேஷ், தொழில் பிரிவு மாநில செயலாளர் கொம்பன் பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×