search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூரில் பா.ஜனதா ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    ஆத்தூரில் பா.ஜனதா ஆலோசனை கூட்டம்

    • சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
    • கூட்டத்தில் மண்டல் பொதுச்செயலாளர் முருகன் என்ற பரமசிவன்,பா.ஜ.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தென்திருப்பேரை:

    திருச்செந்தூருக்கு என் மண், என் மக்கள் பாதயாத்திரையாக வருகிற 14-ந் தேதி வருகை தரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஆத்தூரில் மண்டல் தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் மண்டல் பொதுச்செயலாளர் முருகன் என்ற பரமசிவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், நசரேன், மாவட்ட விவசாய அணி பொருளாளர் மகாதேவன், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ்குமார், செயலாளர் மகேஷ்வரி, பொருளாளர் சிவநேசன், ஓ.பி.சி. அணி தலைவர் பட்டுராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சசின்டன், மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு துணைத் தலைவர் முத்துலெட்சுமி, இளைஞரணி தலைவர் ராஜதுரை, சிந்தனையாளர் பிரிவு செயலாளர் பால்வண்ணன், அரசு தொடர்புதுறை மண்டல் தலைவர் பிச்சமுத்து, பிரசார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கிளைத்தலைவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×