search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் விழிப்புணர்வு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம். 

    பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

    • தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை தாங்கினார்.
    • சமுதாய நலசெவிலியர் பாக்கியவதி, கிராம சுகாதார செவிலியர் மாலதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் வளரும் பருவத்தினருக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை தாங்கினார்.

    மேலும் அவர், பள்ளி மாணவ- மாணவிகள், வளரும் பருவத்தினருக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள், அதனை எப்படி தவிர்த்தல், புகார் செய்யும் விதம், வீடுகள், சுற்றுப்புறங்கள், சாலைகளில் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க நெறிகள் குறித்து விரிவாக பேசினார். கலந்துரையாடல், செய்முறைப் பயிற்சிகள் நடைபெற்றது.சமுதாய நலசெவிலியர் பாக்கியவதி, கிராம சுகாதார செவிலியர் மாலதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×