search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளின் கள்ளக்காதலனை ஏவி ஆட்டோ டிரைவர் கொலை:  அடிக்கடி குடித்துவிட்டு வந்து மகளிடம்   தகராறு செய்ந்ததால் கொலை செய்தேன்
    X

    மகளின் கள்ளக்காதலனை ஏவி ஆட்டோ டிரைவர் கொலை: அடிக்கடி குடித்துவிட்டு வந்து மகளிடம் தகராறு செய்ந்ததால் கொலை செய்தேன்

    • அருள்மணிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
    • இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவருடைய மகன் அருள்மணி (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோதிலட்சுமி (26) என்பவருக்கும் திருமணமாகி நித்ரன் (5), அகிலன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். அருள்மணிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று அருள்மணி அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவருடைய நண்பர் லோகேஸ்வரன் (23) ஆகியோருடன் சேர்ந்து மது குடித்தார்.

    அப்போது போதையில் இருந்த அருள்மணியை கற்கள் மற்றும் மதுபாட்டி லால் தலையில் சரமாரியாக தாக்கி அடித்து விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அருள்மணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக வெண்ணந்தூர் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அருள்மணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசாரின் விசாரணையில், மணி கண்டன், லோகேஸ்வரன் ஆகியோர் அருள்மணியை அடித்துக்கொலை செய்ததும், அதற்கு உடந்தை யாக அருள்மணியின் மாமியார் ஜானகி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டன், லோகேஸ்வரன் மற்றும் மாமியார் ஜானகி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மணி கண்டனுக்கும் ஜானகியின் மகள் ஜோதி லட்சுமிக்கும் இடையே கள்லத்தொடர்பு இருந்ததும அதை கண்டித்து மகளிடம் அடிக்கடி தகராறு செய்ததால் அவர் மூலம் மாமியார் ஜானகி இந்த கொலையில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கைதான ஜானகி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    அருள்மணி அடிக்கடி குடித்துவிட்டு எனது மகள் ஜோதிலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு கொடுமைப்படுத்தினார். இதனால் ஜோதிலட்சுமி அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு என் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    இதனால் மகளின் வாழ்க்கையை நினைத்து வருந்திய நான் மருமகன் அருள்மணியை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக மணிகண்டன், அவருடைய நண்பர் லோகேஸ்வரன் மூலம் அருள்மணியை கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மகளின் கள்ளக்கா தலனை ஏவி மருமகனை மாமியார் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×