search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் சம்பள பணம் கேட்ட ஊழியர் மீது தாக்குதல்
    X

    தஞ்சையில் சம்பள பணம் கேட்ட ஊழியர் மீது தாக்குதல்

    • அசோகன் பூக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டது‌‌.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்கார சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது 45).

    இவர் பூக்கார தெரு பகுதியில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் தான் வேலை பார்க்கும் கடை உரிமையாளர் விஜய் (30) என்பவரிடம் தனக்கு சம்பள பணம் வழங்குமாறு கேட்டுள்ளார்.

    அதற்கு விஜய் கொடுக்க மறுத்தார்.

    இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் விஜய் ஆத்திரம் அடைந்து கட்டையால் அசோகனை தாக்கினார்.

    இந்த தாக்குதலில் அசோகன் காயமடைந்தார்.

    இது குறித்த அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.

    Next Story
    ×