என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மூதாட்டி தவறி விழுந்து பலி
- மடத்தூர்- சோரீஸ்புரம் சாலையில் வரும் போது சுப்புலட்சுமிக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது.
- உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கோரம்பள்ளம் இ.பி. காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சுப்புலட்சுமி(வயது 65). இவர் தனது மகன் முகேசுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மடத்தூர்- சோரீஸ்புரம் சாலையில் வரும் போது சுப்புலட்சுமிக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் முகேசிடம் கூறியுள்ளார். உடனடியாக அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றுள்ளார். அதற்குள் சுப்புலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொன்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்