என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- 1972-ம் ஆண்டு படித்த மாணவர்கள் இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர்.
- சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குமாரதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நெல்லை:
நெல்லை மருத்துவக் கல்லூரியில் 1972-ம் ஆண்டு படித்த நெல்லை மாணவர்கள் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர்.
கல்லூரி அரங்கில் மாணவர்கள் முன்னிலையில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் டாக்டர் சாந்தாராம், பேராசிரியை ஜெயந்தி, சுஜாதா ஆண்ட்ரூ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், டாக்டர் மோகன் ஆறுமுகப்பாண்டியன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குமாரதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 72-ம் ஆண்டில் இணைந்து தற்போது நெல்லை மருத்துவக்கல்லூரியின் முன்னாள் பொறுப்பு முதல்வர் டாக்டர் ராமகுரு, டாக்டர்கள் துரையப்பா, முன்னாள் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் அருண்மொழி, ராமசாமி, சீனிவாசன், டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜிம்லா மற்றும் மருத்துவர்கள் சுந்தர்ராஜன் பரமசிவன், ராஜன் ஜெயகுமார், ஹம்லவர்தினி செல்வராஜ், மோகன் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்