என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடையநல்லூர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கருப்பாநதி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும்- கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் கோரிக்கை
- கடையநல்லூர் நகராட்சியில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது.
- தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், கருப்பாநதி அணையிலிருந்து சுமார் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை கடைய நல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடையநல்லூர் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளிலும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது.
இவர்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய நகராட்சி சார்பில் பெரியாற்றுப்படுகையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட உறைகிணறு அமைக்கப் பட்டும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், கருப்பாநதி அணைக்கட்டு குடிநீர் திட்டம் என இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது தொடர் வெயில் காரணமாக வும், தென்மேற்கு பருவ மழையும் பொய்த்ததால் பெரியாறு கல்லாற்றிலும் தண்ணீரின்றி வறண்டு விட்டது.
கடையநல்லூர் நகராட்சிக்கு சராசரியாக சுமார் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் வரத்து வந்த நிலையில், தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் கருப்பாநதி அணையிலிருந்து சுமார் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது.
இந்த குடிநீரை வைத்து தான் அனைத்து பகுதி களுக்கும் சரி சமமாக பகிர்ந்து குடிநீர் வினியோகம் செய்து வருகின்றோம்.
எனவே இப்பகுதி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீரை கூடுதலாக திறந்து விட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்