search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி 17, 18-வது வார்டுகளில் சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை - அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு
    X

    மழை நீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்ட காட்சி.

    தூத்துக்குடி 17, 18-வது வார்டுகளில் சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை - அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு

    • தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
    • 18-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு விட்டதால் சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சி 17-வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா நகர், ஹரிராம் நகர், ராஜீவ்நகர் மற்றும் 18-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள துரிதப்படுத்தினார்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் ராமர், ஜான் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×