search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலத்தூர் அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
    X

    இலத்தூர் அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

    • நேற்று முன்தினம் மாலையில் நிர்மலா தேவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
    • வலி தாங்க முடியாமல் துடித்த நிர்மலாதேவி அலறியபடி வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் வந்து விழுந்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே உள்ள வள்ளியம்மாள்புரம் இந்திரா காலனி தெருவை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி நிர்மலா தேவி(வயது 34). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை யில் நிர்மலா தேவி வீட்டில் சமையல் செய்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பா ராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தடுமாறவே, அவரது சேலையில் தீப்பற்றியுள்ளது. தீ மளமளவென அவரது இடுப்பு பகுதிக்கு கீழ் வரை பற்றியது.

    வலி தாங்க முடியாமல் துடித்த நிர்மலாதேவி அலறியபடி வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் வந்து விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×