search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகமாக வந்த காரை துரத்தி மடக்கி பிடித்த போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்
    X

    வேகமாக வந்த காரை துரத்தி மடக்கி பிடித்த போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்

    • தஞ்சை சிங்கபெருமாள் குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ஹரிபாபு, காரல்மார்க்ஸ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் காட்டுராஜா. இவர் மற்றும் போலீசார் தஞ்சை சிங்கபெருமாள் குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் தஞ்சையை சேர்ந்த ஹரிபாபு, காரல் மார்க்ஸ் ஆகிய 2 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர்.

    அந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரில் வந்தவர்கள் வேகமாக நிறுத்தாமல் ஒட்டி சென்றனர். இதனால் போலீஸ்காரர் காட்டுராஜா மற்றும் போலீசார் வாகனத்தில் ஏறி அந்த காரை துரத்தினர். சிவகங்கை பூங்கா அருகே காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் இருந்த ஹரிபாபு, காரல் மார்க்ஸ் ஆகியோர் சேர்ந்து போலீஸ்காரர் காட்டுராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு தரக்குறைவாக பேசி உள்ளனர்.

    பின்னர் அங்கிருந்து காரில் சென்று விட்டனர்.இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் காட்டுராஜா தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் ஹரிபாபு, காரல்மார்க்ஸ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் இது பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×