என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பேட்டை அருகே ராணுவ வீரரை தாக்கிய கும்பல் - 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்6 Sep 2022 9:26 AM GMT
- ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் மத்திய பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.
- கிருஷ்ணபேரி சாலையில் வந்த போது இவரது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மாரியப்பன் மீது உரசுவது போல் வந்துள்ளனர்.
நெல்லை:
ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் மத்திய பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மாரியப்பன் நேற்று மோட்டார் சைக்கிளில் நெல்லை பேட்டைக்கு வந்தார்.
கிருஷ்ணபேரி சாலையில் வந்த போது இவரது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மாரியப்பன் மீது உரசுவது போல் வந்துள்ளனர். இதனால் அவர்களை மாரியப்பன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் மாரியப்பனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாரியப்பனை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வாலிபர் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 சிறுவர்களை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X