search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டை அருகே ராணுவ வீரரை தாக்கிய கும்பல் -  2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
    X

    பேட்டை அருகே ராணுவ வீரரை தாக்கிய கும்பல் - 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

    • ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் மத்திய பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • கிருஷ்ணபேரி சாலையில் வந்த போது இவரது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மாரியப்பன் மீது உரசுவது போல் வந்துள்ளனர்.

    நெல்லை:

    ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 30). இவர் மத்திய பிரதேசத்தில் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மாரியப்பன் நேற்று மோட்டார் சைக்கிளில் நெல்லை பேட்டைக்கு வந்தார்.

    கிருஷ்ணபேரி சாலையில் வந்த போது இவரது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மாரியப்பன் மீது உரசுவது போல் வந்துள்ளனர். இதனால் அவர்களை மாரியப்பன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் மாரியப்பனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதுகுறித்து அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாரியப்பனை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற வாலிபர் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 சிறுவர்களை கைது செய்தனர்.

    Next Story
    ×