search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் அருகே குட்கா விற்ற மளிகை கடைக்காரர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    சதீஷ்குமார்.

    ராசிபுரம் அருகே குட்கா விற்ற மளிகை கடைக்காரர் குண்டர் சட்டத்தில் கைது

    • தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட முள்ளு–குறிச்சியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது34). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக பேளுகுறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவுக்கிணங்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரேயா சிங் சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து சதீஷ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×