என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராசிபுரம் அருகே குட்கா விற்ற மளிகை கடைக்காரர் குண்டர் சட்டத்தில் கைது
- தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட முள்ளு–குறிச்சியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது34). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக பேளுகுறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவுக்கிணங்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரேயா சிங் சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து சதீஷ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்